Aasai Alaikalil Aadum

Aasai Alaikalil Aadum Song Lyrics In English


ஆசை அலைகளில் ஆடும்
இந்த மானிட வாழ்வொரு ஓடம்
ஆசை அலைகளில் ஆடும்
இந்த மானிட வாழ்வொரு ஓடம்

அது ஓடுவதும் கரை சேருவதும்
எந்த இடம் என்று யார் சொல்லக் கூடும்

மாளிகை வாசம் தந்தையின் பாசம்
மறந்தது உந்தன் கலைகளின் மோகம்
மாளிகை வாசம் தந்தையின் பாசம்
மறந்தது உந்தன் கலைகளின் மோகம்

காதலில் யாவும் இழந்தவர் பின்பு
காதலில் யாவும் இழந்தவர் பின்பு
காதலுக்காக வருந்துவதுண்டு
காதலுக்காக வருந்துவதுண்டு

நடப்பது யாவும் இறைவனை கேட்டு
நல்லதென்றாகும் காலத்தின் தீர்ப்பு
நடப்பது யாவும் இறைவனை கேட்டு
நல்லதென்றாகும் காலத்தின் தீர்ப்பு

ஊர் பழித்தாலும் வந்ததை ஏற்று
ஊர் பழித்தாலும் வந்ததை ஏற்று
சீதையை போலே வாழ்ந்து நீ காட்டு
சீதையை போலே வாழ்ந்து நீ காட்டு


குலவழி வந்த கௌரவம் பார்த்த
தலைவா நீயோ தனி மரம் இன்று
குலவழி வந்த கௌரவம் பார்த்த
தலைவா நீயோ தனி மரம் இன்று

பாசமும் அன்பும் நேசமும் கொண்டு
பாசமும் அன்பும் நேசமும் கொண்டு
பரம்பரை வாழ நினைப்பது நன்று
பரம்பரை வாழ நினைப்பது நன்று

ஆசை அலைகளில் ஆடும்
இந்த மானிட வாழ்வொரு ஓடம்

அது ஓடுவதும் கரை சேருவதும்
எந்த இடம் என்று யார் சொல்லக் கூடும்