Aasai Nenje Nee Paadu |
---|
ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான் தாய் வீடு
அம்மம்மா என்னனவோ கனவு
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
அம்மம்மா என்னனவோ கனவு
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான் தாய் வீடு
கனியாய் கனிந்தாய் வண்ணவிழி மாது
கனவுகள் நனவாய் காணும் போது
மணநாள் வரலாம் மாலை கொண்டாட
என்னை நீ வாழ்த்தி காவியம் பாட
கண்ணுக்குள் என்னனவோ வண்ணங்கள்
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
அம்மம்மா என்னனவோ கனவு
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான் தாய் வீடு
பாசம் என்றொரு நூலிழை கொண்டு
தொடுத்தேனே அன்பு மாலையை இன்று
நெடுநாள் வரைக்கும் நினைவில் மணக்கும்
நினைத்தது போலே எதுவும் நடக்கும்
நெஞ்சுக்குள் என்னென்னவோ எண்ணங்கள்
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான் தாய் வீடு