Aasai Nenjin Kanavugal |
---|
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ வரும் வரை
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
பொங்கி வரும் அலை பூச் சரம் போட
பூமியை சேர்கின்றது
பொன் நிறம் போல் எழில் வெண்ணிற வானில்
மன்மதன் தேர் வந்தது
மலர்க் கணைகள் விழி வழியே
மது மயக்கம் மொழி வழியே
மாற்றம் இங்கே தோற்றம் வா இப்போது
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
வாழ்ந்திருந்தால் தினம் நான் உன்னோடு
வாழ்வினைப் பார்த்திருப்பேன்
வாழ்க்கை எல்லாம் சுகம் வளர்வதைப் போலே
நான் உனைச் சேர்ந்திருப்பேன்
கனவுகளே நினைவில் வரும்
நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா இன்றும் என்றும் நான் உன்னோடு
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
காலம் எல்லாம் உந்தன் காலடி தேடி
காவியம் பாட வந்தேன்
கண் விழித்தால் உன்னைக் காண்பதைப் போலே
கனவினில் நான் இருந்தேன்
உறவிருந்தால் தனிமை இல்லை
தனித்திருந்தால் இனிமை இல்லை
இருவர் : இனி மேல் பிரிவே இல்லை
நாம் ஒன்றானோம்
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ வரும் வரை
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை