Aasai Nenjin Kanavugal

Aasai Nenjin Kanavugal Song Lyrics In English


ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ வரும் வரை

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை

பொங்கி வரும் அலை பூச் சரம் போட
பூமியை சேர்கின்றது

பொன் நிறம் போல் எழில் வெண்ணிற வானில்
மன்மதன் தேர் வந்தது

மலர்க் கணைகள் விழி வழியே
மது மயக்கம் மொழி வழியே
மாற்றம் இங்கே தோற்றம் வா இப்போது

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை

வாழ்ந்திருந்தால் தினம் நான் உன்னோடு
வாழ்வினைப் பார்த்திருப்பேன்
வாழ்க்கை எல்லாம் சுகம் வளர்வதைப் போலே
நான் உனைச் சேர்ந்திருப்பேன்

கனவுகளே நினைவில் வரும்
நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா இன்றும் என்றும் நான் உன்னோடு

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை


காலம் எல்லாம் உந்தன் காலடி தேடி
காவியம் பாட வந்தேன்

கண் விழித்தால் உன்னைக் காண்பதைப் போலே
கனவினில் நான் இருந்தேன்

உறவிருந்தால் தனிமை இல்லை

தனித்திருந்தால் இனிமை இல்லை

இருவர் : இனி மேல் பிரிவே இல்லை

நாம் ஒன்றானோம்

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ வரும் வரை

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை