Aasaiyilae Pathi Katti Sad

Aasaiyilae Pathi Katti Sad Song Lyrics In English


ஆசையில பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு
நட்டு வைக்க வா பூவாயி

ஆசையில பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு
நட்டு வைக்க வா பூவாயி

ஆதரவ தேடி ஒரு பாட்டு
ஒண்ணு கட்டி வச்சேன்
வா என் தாயி

நானா பாடலையே
நீ தான் பாட வச்ச
நானா பாடலையே
நீ தான் பாட வச்ச

ஆசையில பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு
நட்டு வைக்க வா பூவாயி

கண்ணுதான் தூங்கவில்லை
காரணம் தோணவில்லை
பொண்ணு நீ ஜாதி முல்லை
பூமாலை ஆகவில்லை

கன்னி நீ நாத்து
கண்ணன் நான் காத்து
வந்து தான் கூடவில்லை
கூரப்பட்டு சேலை
நான் வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை
நீ சொல்லு அந்த நாளை
உனக்காக நான் காத்திருக்க
பதில் கூறு பூவாயி

ஆசையில பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு
நட்டு வைக்க வா பூவாயி


ஆதரவ தேடி ஒரு பாட்டு
ஒண்ணு கட்டி வச்சேன்
வா என் தாயி

சொந்தமா பாடுங்கிளி
சோகமா போனதய்யா
உள்ளம் தான்
நொந்து நொந்து ஊமையா ஆனதய்யா
கண்ணுல நீரு காரணம் யாரு
கன்னி நான் கூறவா
ஒத்தமரம் போல
நான் நிக்கும் இந்த வேளை
என்ன சொல்லி பாட என்
துன்பம் எல்லை மீற

தொடராது இது இனி மேலே
தொனை நான் தான் பூவாயி

ஆசையில பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு
நட்டு வச்சேன் நான் பூவாயி

ஆதரவ தேடி ஒரு பாட்டு
ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி

நானா பாடலையே
நீ தான் பாட வச்ச
நானா பாடலையே
நீ தான் பாட வச்ச

ஆசையில பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு
நட்டு வச்சேன் நான் பூவாயி