Aasaiyudan Avar Azhaithal |
---|
ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே தேடாமலே ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே தேடாமலே
கண்ணின் மணி போலே என் அண்ணன் வாழ்விலே கண்ணின் துணையாக நீ சேர்ந்து வாழுவாய் கண்ணின் மணி போலே என் அண்ணன் வாழ்விலே கண்ணின் துணையாக நீ சேர்ந்து வாழுவாய் விண்ணின் மதி போல நீ இந்த வீட்டிலே பெண்ணின் ஒளியாக வாழ்வாய் இந்நாட்டிலே
ஸ்ருதி சேராமலே இசை சேராதம்மா
ஸ்ருதி சேராமலே இசை சேராதம்மா சுகம் காணாதம்மா
ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே தேடாமலே
இன்பக் கலையாலே எண்ணங்கள் கூடலாம் அன்பு மொழியாலே உள்ளங்கள் சேரலாம் இன்பக் கலையாலே எண்ணங்கள் கூடலாம் அன்பு மொழியாலே உள்ளங்கள் சேரலாம் துன்ப அலையாவும் தீர்ந்தோட செய்யலாம் பண்பு நிலையாலே பேரின்பம் காணலாம்
இதழ் பேசாமலே மனம் கூடாதம்மா
இதழ் பேசாமலே மனம் கூடாதம்மா சுகம் காணாதம்மா
ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே தேடாமலே