Aasappattu Unna Thottu

Aasappattu Unna Thottu Song Lyrics In English


பாடலாசிரியர்  : மாதுரி பச்சையப்பன்

தந்தானான தந்தானான தானனன

ஆசப்பட்டு உன்னத் தொட்டு அழுத்தி வச்சேன் குங்குமப் பொட்டு ஆசப்பட்டு உன்னத் தொட்டு அழுத்தி வச்சேன் குங்குமப் பொட்டு அத்த மகளே அன்னப்பூரணம் நான் வச்சப் பொட்டு அழிஞ்சிருக்கிடி என்ன காரணம்

அரிசி வாங்க போகையிலே அலைஞ்சேன் மச்சான் வெயிலுக்குள்ளே அரிசி வாங்க போகையிலே அலைஞ்சேன் மச்சான் வெயிலுக்குள்ளே ஆகையால வேர்வையும் பட்டு என் மச்சான் மச்சான் அழிஞ்சிப் போச்சு சிங்காரப் பொட்டு என் மச்சான் மச்சான் அழிஞ்சிப் போச்சு சிங்காரப் பொட்டு

ஆசப்பட்டு ஆசப்பட்டு ஆசப்பட்டு உன்னத் தொட்டு அழுத்தி வச்சேன் குங்குமப் பொட்டு அத்த மகளே அன்னப்பூரணம் நான் வச்சப் பொட்டு அழிஞ்சிருக்கிடி என்ன காரணம்

அதான் சொன்னேன்ல

கொண்டையிட்டு பூ முடிஞ்சி கொஞ்சம் நேரம் ஆகுமுன்னே கொண்டையிட்டு பூ முடிஞ்சி கொஞ்சம் நேரம் ஆகுமுன்னே கூந்தல் உளைஞ்ச காரணம் என்னடி பிள்ளை பொட்டு கிட்டே சொல்லித் தீரணும்


அங்காளம்மன் கோயிலிலே அறியாப் பொண்ணு என் மேலே ஆங்காரமாய் சாமி வந்தது அங்காளம்மன் கோயிலிலே அறியாப் பொண்ணு என் மேலே ஆங்காரமாய் சாமி வந்தது எம் மச்சான் மச்சான் ஆடும்போது கொண்ட உளைஞ்சது எம் மச்சான் மச்சான் ஆடும்போது கொண்ட உளைஞ்சது

ஆசப்பட்டு ஹான் ஆசப்பட்டு ஆசப்பட்டு ஹான் என்னத் தொட்டு அழுத்தி வச்ச குங்குமப்பொட்டு அத்த மகளே அன்னப் பூரணம் நம் வாழ்க்கையிலே அன்புடனே ஒண்ணு சேரணும்

அத்தப் பெத்த ரத்தினமே அச்சடித்த சித்திரமே அத்தப் பெத்த ரத்தினமே அச்சடித்த சித்திரமே அறிவு கெட்டே சந்தேகப் பட்டேன் உத்தமியின்னு அறிஞ்சுகிட்டே சந்தோஷப்பட்டேன்

சந்தேகம் என்கிறது சமுதாய வியாதி அது சந்தேகம் என்கிறது சமுதாய வியாதி அது சந்தோஷமா ஜோடியாகவே நாம் வாழ்ந்திடுவோம் சர்க்கரையும் பாலும் போலவே

இருவர் : நாம் வாழ்ந்திடுவோம் சர்க்கரையும் பாலும் போலவே

ஆசப்பட்டு ஆசப்பட்டு ஆசப்பட்டு என்னத் தொட்டு அழுத்தி வச்ச குங்குமப்பொட்டு அத்த மகளே அன்னப் பூரணம் நான் வச்சப் பொட்டு எப்போதுமே நெலச்சு நிக்கணும் ஆமாம் மச்சான் எப்போதுமே நெலச்சு நிக்கணும் நான் வச்சப் பொட்டு எப்போதுமே நெலச்சு நிக்கணும்