Aathaadi Allikodi

Aathaadi Allikodi Song Lyrics In English


ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி
காலம் தோறும் பூப் பூக்கும்
கேட்கும் போது தேன் வார்க்கும்
கையில் ஏந்து கொத்தோடு
காதல் பொங்க முத்தாடு
தாளாது மோகங்கள் தீராது
பூ மேனி தூங்காது வாட

ஆஅ

ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி

ஈரமான ஆடைதான்
பாரமாகக் கூடுதே
ஓசை செய்யும் நீர் அலை
ஆசை நெஞ்சைத் தூண்டுதே
கூச்சம் இன்றி ஜோடியாய்
நீச்சல் போடும் வேளைதான்
நானும் நீயும் காணலாம்
நாளும் கிருஷ்ண லீலைதான்

வாடாமல் நான் இங்கு வாட
இன்பம் வாராதோ நீ என்னைக் கூட
உந்தன் தோள் மேல் சாய
வெள்ளம் தேன் போல் பாய

ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி
காலம் தோறும் பூப் பூக்கும்
கேட்கும் போது தேன் வார்க்கும்
கையில் ஏந்து கொத்தோடு
காதல் பொங்க முத்தாடு
தாளாது மோகங்கள் தீராது
பூ மேனி தூங்காது வாட

ஆஅ


நேற்று வந்த நாயகி
ஆற்றில் மூழ்கி ஓடினாள்
நீண்ட கால காதலி
நெஞ்சில் நின்று ஆடினாள்
வாரி வாரி என்னை நீ மார்பில் மெல்லத் தாங்கிடு
பாரிஜாதப் பூக்களில் ஊறும் தேனை வாங்கிடு

மேன் மேலும் மோகங்கள் கூட
நெஞ்சில் ஏதேதோ எண்ணங்கள் ஓட
என்னை நீ தான் தீண்ட
உன்னை நான்தான் வேண்ட

ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி
காலம் தோறும் பூப் பூக்கும்
கேட்கும் போது தேன் வார்க்கும்
கையில் ஏந்து கொத்தோடு
காதல் பொங்க முத்தாடு
தாளாது மோகங்கள் தீராது
பூ மேனி தூங்காது வாட

ஆஅ

ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி