Aathi Antham |
|---|
ஆதி அந்தம் இல்லாதவனே
ஆண்டவனே சம்போ
தேடி உன்னை சரண் அடைந்தேன்
இல்லை என்றால் அம்போ
தாளை ஏதுவாய்
கதம்ப மலர் மாலை சூடுவாய்
மூன்று கண்ணனே
உடம்பு என்றும் சாம்பல் வண்ணனே
சரணம் உனதடி
ஆதி அந்தம் இல்லாதவனே
ஆண்டவனே சம்போ
தேடி உன்னை சரண் அடைந்தேன்
இல்லை என்றால் அம்போ
{நாராயண நாராயண
வணக்கம் நாரதரே வணக்கம்
அப்பாவைப் பற்றிப் பாடிக் கொண்டு
பிள்ளை முருகனிடத்திலே வந்திருக்கிறீரே
ஏதாவது கலாட்டாவா
முருகா தங்கள் கையில் இருந்த
தங்க வேல் எங்கே காணவில்லை
திருச்செந்தூர் சென்றிருந்தேன்
திருடி விட்டார்கள் பாவிகள்
கடவுளுக்கே இந்த நிலையா
கடவுளையே திருடுகிறார்களே
அது சரி தாங்கள் வந்த விஷயம்
பூலோகத்தில் ஒரு கனியைக் கண்டேன்
பால் கனியா முகமது கனியா
கூறுகிறேன் கேளுங்கள்} (வசனம்)
ஆ கண்டு களித்தேன் கண்டு களித்தேன்
காட்டில் கனியை கண்டு களித்தேன்
உன்னை நினைத்தேன் உன்னை நினைத்தேன்
அதை உனக்கே சேர்க்க எண்ணித் தவித்தேன்
முருகா முருகா
அரஹர அரஹர
அவள் அழகோ அழகு
சிவ சிவ சிவ சிவ
கிளம்பு கிளம்பு
அரஹர அரஹர
நீ உடனே கிளம்பு
{அட்ரஸை கூற முடியுமா
ஓ எஸ் கார்டன்
ஓ எஸ் கார்டனா
அது வில்லி கார்டனாச்சே
மன்னிக்க வேண்டும்
இதோ இருக்கிறது வள்ளி கார்டன்} (வசனம்)
கையில் ஒரு கவள் எடுத்தேனே
கல்லால் உன்னை நான் அடிப்பேனே
வள்ளி என் வனத்தினில் ஆடும்
குருவிகளே ஹெய் ஆலோலம்
குருவிகளே ஹெய் ஆலோலம்
அஹ தினைபுனம் மீதினில்
மேயிற குருவிகளே
ச்சீ போ ச்சீ போ ச்சீ போ
எங்கள் வனத்தினில் விளையிற
சோளக் கதிர் அது சீப்பா
சீப்பா சீப்பா சீப்பா
{யாரையா நீர்
என்னையா தெரியவில்லை
நன்றாகப் பார் உதய சூரியன்
உலகத்துக்கே தெரியுமே
உனக்கா தெரியவில்லை
தெரிகிறது தெரிகிறது எங்கு வந்தீர்} (வசனம்)
காயாத கானகத்தே
நின்றுலாவும் காரிகையே
காயாத கானகத்தே
நின்றுலாவும் காரிகையே
அடி மேயாத மானும் வர
கண்டதுண்டோ காரிகையே
மேயாத மானும் வர
கண்டதுண்டோ காரிகையே
{உமது மானுக்கு என்ன அடையாளம்
உடம்பில் வரி வரியாக இருக்கும்
ஹும் அது புலி அய்யா
ஹஹஹ விளக்காமாகச் சொல்லுகிறேன் கேள்} (வசனம் )
மானு பூச்சேல கட்டி நிற்கும் மானு
ஹஹஹா
மீனு அந்த மானோட கண்ணு ரெண்டும் மீனு
ஹஹஹா
கொம்பு ரெண்டு இல்லையடி
கொம்பு ரெண்டு உண்டு
புள்ளி ஏதும் இல்லையடி புள்ளி கூட உண்டு
மானு பூச்சேல கட்டி நிற்கும் மானு
ஹஹஹா
மீனு அந்த மானோட கண்ணு ரெண்டும் மீனு
வம்பிழுக்க வந்த வேடன் நீ
வனத்தில் வந்து
பொம்பளையைத் தேடும் மூடன் நீ
ஓய் ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஓரம் போ
ஜிங்கள ஜிங்கா ஓரம் போ ஜிங்கள ஜிங்கா
ஓரம் போ
இதுக்கு மேல ஓரம் போனா
ஸ்டேஜ்ல இருந்து கீழ விழுந்துருவேம்மா (வசனம்)
கல்யாணம் ஆகவில்லே
புள்ள குட்டி ஏதும் இல்லே
தள்ளாத வயதினிலே யார் எனக்கிங்கே
யார் எனக்கிங்கே ஜோடி யார் எனக்கிங்கே
நீ தான் எனக்கு சரி ஜோடி
ஒன்னப் போல் தொண தான் வருமாடி
தேன் கலந்தே தினை மாவினிலே ஹோய்
நான் கலந்தே உனக்கே தருவேன்
தின்னும் பொழுது விக்கல் வருமே
விக்கல் எடுத்தால் தண்ணி தருவேன்
லால்ல லல்லா லால்லா லால்லா
லால்ல லல்லா லால்லா லால்லா
அம்மா இது மூக்கு ஓட்டை
வாய் ஓட்டை இங்கே இருக்கிறது
மன்னிக்க வேண்டும் தாத்தா
முடி மூடி இருப்பதால் வாய் எங்கே
இருக்கிறதென்று தெரியவில்லை} (வசனம்)
தாத்தாவுக்கு குடுமா குடுமா
அட ஒண்ணே ஒன்னு
இந்த தாத்தா போல வருமா வருமா
என் கண்ணே கண்ணு
ஹேய் தாத்தாவுக்கு குடுமா குடுமா
அட ஒண்ணே ஒன்னு
இந்த தாத்தா போல வருமா வருமா
என் கண்ணே கண்ணு
மீச நரச்சா பொண்ணு கேக்கிறதா
எனக்குத் தெம்பு இருக்கு அணைக்கத்தான்
விநாயகரே கணபதியாரே
எனக்கு முன்னால் பிறந்தவரே
அண்ணா என்னைக் காப்பாற்று (வசனம்)
வெளுத்துக் கட்டிக்கடா
என் தம்பி தங்கக் கம்பி
வளச்சு புடிச்சுக்கடா
ஓன் வள்ளி வண்ணக் கிளி
நல்லா வெளுத்துக் கட்டிக்கடா
என் தம்பி தங்கக் கம்பி
வளச்சு புடிச்சுக்கடா
ஓன் வள்ளி வண்ணக் கிளி
