Aathoram Kodi Veedu |
---|
ஆத்தோரம் கொடி வீடு
அதன் மேலே கோபாலன்
அவனோடு நானாடுவேன்
ஆடாமல் அசையாமல் ஆனந்த லயத்தோடு
அழகாக விளையாடுவேன்
ஆத்தோரம் கொடி வீடு
அதன் மேலே கோபாலன்
அவனோடு நானாடுவேன்
ஆடாமல் அசையாமல் ஆனந்த லயத்தோடு
அழகாக விளையாடுவேன்
கண்ணன் தேகம் என்பது மேகங்கள்
கண்கள் என்பது வைரங்கள்
கண்ணன் இதழ்கள் என்பது பூமேடை
இதயம் என்பது பூஞ்சோலை
நான் கொண்ட வரமல்லவோ
கண்ணன் என் கையில் பொருளல்லவோ
ஆஹாராதாவும் அறியாமலே
என் மேலாடை அவன் கையிலே
என்னைக் கண்ணன் கொஞ்சிய காலங்கள்
காதல் பொங்கிய நேரங்கள்
எந்தன் கன்னம் காட்டிய கோலங்கள்
இன்னும் கேட்டன எண்ணங்கள்
ஆனந்த இரவல்லவோ
அன்று அவன் தந்த உறவல்லவோ
ஆஹா பெண்ணாக நான் வந்ததே
என் கண்ணா உன் துணை கொள்ளவே
ஆத்தோரம் கொடி வீடு
அதன் மேலே கோபாலன்
அவனோடு நானாடுவேன்
ஆடாமல் அசையாமல் ஆனந்த லயத்தோடு
அழகாக விளையாடுவேன்