Aathoram Manal Eduthu Happy |
---|
இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்
இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்
வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேலியிலே கொடி இருக்கும் கை அகலம் கதவு இருக்கும் காற்று வர வழி இருக்கும்
வழி மேலே விழி இருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடம் இருக்கும்
இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்
மணி கதவை திறந்து வைப்போம் மாமனுக்கு விருந்து வைப்போம் கனி கனியாய் எடுத்து வைப்போம் கை நிறைய தேன் கொடுப்போம் நிலவு வரும் நேரத்திலே நிம்மதியாக தூங்க வைப்போம்
இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்
பாத்து விறல் மோதிரமாம் பவள மல்லி மாலைகளாம் முத்து வடம் பூ சரமாம் மூக்குத்தியாம் தோடுகளாம் அத்தை அவள் சீதனமாம் அத்தனையும் வீடு வரும்
கல்யாணம் ஊர்வலமாம் கச்சேரி விருந்துகளாம் மாப்பிள்ளையின் அம்மாவும் மனம் குளிர வருவாளாம் அம்மாவின் ஆணை இதுவே அன்புடனே வணங்கிடுவோம்
இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்