Aathu Mettula

Aathu Mettula Song Lyrics In English


ஆத்துல மேட்டுல
வீட்டுல நாட்டுல
ஏழைகளின் செல்வமே
ஏலே ஏலோ சாமியே

என்றும் இந்த பாட்டுதான்
ஏலே ஏலோ சாமியே
தீராத வேதனை தான் தீருமே
மாறாத பாரமே ஓடோடுமே

ஆத்துல மேட்டுல
வீட்டுல நாட்டுல
ஏழைகளின் செல்வமே
ஏலே ஏலோ சாமியே

என்றும் இந்த பாட்டுதான்
ஏலே ஏலோ சாமியே
தீராத வேதனை தான் தீருமே
மாறாத பாரமே ஓடோடுமே

சேவலின் பாட்டு கேட்டு
வரும் காலை நன்நேரம்
பாவலர் பாட்டு பாடிச் சென்றாலே
ஏழைக்கும் கோழைக்கும் தெம்பு வரும்

ஏத்தத்துப் பாட்டு துள்ளி வரும்
வயல் வெளி கண்டு
சோத்துக்குத் தாளம் போட்டிடும் பாட்டு
என்றைக்கும் இங்கே உண்டு உண்டு

கண்ணன் சொன்ன பாட்டு
கீதை ஆச்சு அன்று
முன்னோர் தந்த பாட்டு
பாதை ஆச்சு இன்று
ஆரீராரிரோ
அன்னை பாட்டு அன்பின் பாட்டு
என்றும் ஈடு ஏது

ஆத்துல மேட்டுல
வீட்டுல நாட்டுல
ஏழைகளின் செல்வமே
ஏலே ஏலோ சாமியே


என்றும் இந்த பாட்டுதான்
ஏலே ஏலோ சாமியே
தீராத வேதனை தான் தீருமே
மாறாத பாரமே ஓடோடுமே

இக்கரை விட்டு
அக்கரைக்குப் போய் வர இங்கே
ஆற்றைக் கடக்க ஆற்றில் மிதக்கும்
பரிசலும் இன்றி போவதும் எங்கே

துன்பத்தை விட்டு
வாழ்க்கை தனை வாழ்ந்திட இங்கே
ஆண்டியும் என்ன அரசனும் என்ன
ஆண்டவன் இன்றிப் போவதெங்கே

நல்லோர் போடும் பாதை
நேராய் போகும் தம்பி
பொல்லோர் போகும் பாதை
ஆறாய் போகும் தம்பி
ஏலே ஏலேலோ
எந்தன் பாட்டு இன்பம் கூட்டும்
என்றும் வாழ்வில் இங்கே

ஆத்துல மேட்டுல
வீட்டுல நாட்டுல
ஏழைகளின் செல்வமே
ஏலே ஏலோ சாமியே

என்றும் இந்த பாட்டுதான்
ஏலே ஏலோ சாமியே
தீராத வேதனை தான் தீருமே
மாறாத பாரமே ஓடோடுமே

ஆத்துல மேட்டுல
ஆத்துலஆஅ