Aattuviththaal Yaaroruvar

Aattuviththaal Yaaroruvar Song Lyrics In English


ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா

ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில்
நானும் உண்டு
நீ நடத்தும் நாடகத்தில்
நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில்
சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன்
அறிவினாலே
ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன்
பாசத்தாலே
நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா

பாஞ்சாலி உன்னிடத்தில்
சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில்
கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை
என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து
துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்


ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா

கடலளவு கிடைத்தாலும்
மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும்
கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான்
உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டேன்
துன்பம் எல்லாம்
விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்
விலகும் கண்ணா

ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா