Aavaram Poovai Thottu

Aavaram Poovai Thottu Song Lyrics In English


பாடகி : பி சுஷீலா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்



ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே தீண்டாதே என்னை மெல்லத்தானே இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே தீண்டாதே என்னை மெல்லத்தானே இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே

அச்சாரம் அள்ளிக்கொண்டு யார்தான் வந்தாலும் அச்சாரம் அள்ளிக்கொண்டு யார்தான் வந்தாலும் அழகான பெண்ணைக்கண்டு ஆசைப்பட்டாலும் ஆகாது எந்தன் முன்னே சேராது செல்லக் கண்ணே மண் பார்த்து வாழும் பெண்ணே மானத்தைக் காக்கும் கண்ணே

இளமைக்கோ வீடும் உண்டு இன்பத்தின் மோகம் உண்டு ஆனாலும் பெண்மை என்றால் அங்கேதான் நாணம் உண்டு மோகத்தை தீண்டும் பனிக்காற்றே என்னைத் தீண்டாதே ஜோடியைத் தேடும் புள்ளி மானே என்னைப் பார்க்காதே


ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே தீண்டாதே என்னை மெல்லத்தானே இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே

ஆத்தோரம் நின்று இங்கே ஆடிடும் பூமரம் அழகென்னைக் கண்டு கண்டு வீசிடும் சாமரம் என் பெயரைச் சொன்னாலே சிறு மொட்டும் பூக்காதோ மந்தாரச் செடியெல்லாம் பூ அள்ளிக் கொட்டாதோ

வானத்துப் பூக்கள் எல்லாம் வாயார வாழ்த்துச் சொல்லும் மேகத்தில் ஊஞ்சல் கட்டி அதில் என்னை ஆடச் சொல்லும் மோகத்தை தீண்டும் பனிக்காற்றே என்னைத் தீண்டாதே ஜோடியைத் தேடும் புள்ளி மானே என்னைப் பார்க்காதே

ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே தீண்டாதே என்னை மெல்லத்தானே இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே தாங்காது எந்தன் உள்ளம் மானே ம்ம்ம்ம்ம்ம்ம்