Aayiram Aayiram Jenmam |
---|
ஆயிரம் ஆயிரம் ஜென்மம் வரும் இந்த சொந்தம் தரும் ஆனந்த கங்கையும் கண்ணில் வரும் அது நெஞ்சில் விழும்
ஆயிரம் ஆயிரம் ஜென்மம் வரும் இந்த சொந்தம் தரும் ஆனந்த கங்கையும் கண்ணில் வரும் அது நெஞ்சில் விழும்
பாசம் காணாத நெஞ்சில் இன்று பாசம் நீ காட்டினாய் தீபம் இல்லாத வீட்டில் வந்து தீபம் நீ ஏற்றினாய்
கண்ணில் காணாத தாயை இன்று உன்னில் நான் காண்கிறேன் காதில் கேட்காத ஜீவ ராகம் எங்கும் நான் கேட்கிறேன்
குங்குமம் கொண்ட மங்கல மங்கை நானல்லவோ கூந்தலில் சூடும் பூக்களும் உந்தன் பேர் சொல்லவோ
ஆயிரம் ஆயிரம் ஜென்மம் வரும் இந்த சொந்தம் தரும் ஆனந்த கங்கையும் கண்ணில் வரும் அது நெஞ்சில் விழும்
கல்லை பெண்ணாக மாற்றி தந்த ராமன் நீயல்லவோ காதல் மாறாமல் உன்னை சேர்ந்த சீதை நானல்லவோ
எந்தன் பேர் சொல்ல இன்று என்னை அன்னை நீ ஆக்கினாய் உந்தன் தோள் மீது சாயும்போது பிள்ளையாய் மாற்றினாய்
அன்னையை போலே உன் முகம் பார்த்து நான் வாழுவேன் பிள்ளையைப் போலே உன் மடி மீது கண் மூடுவேன்
ஆயிரம் ஆயிரம் ஜென்மம் வரும் இந்த சொந்தம் தரும் ஆனந்த கங்கையும் கண்ணில் வரும் அது நெஞ்சில் விழும்