Aayiram Malargalae

Aayiram Malargalae Song Lyrics In English


ஆஅஆஆஆஆஆஆ
ஹாஆஅஹாஆஅஹாஆஅ

ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்சொல்லுங்கள்

ஆயிரம் மலர்களே மலருங்கள்

வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்
வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ

ஆயிரம் மலர்களே மலருங்கள்


கோடையில் மழை வரும்
வசந்தக் காலம் மாறலாம்
எழுதிச் செல்லும்
விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும்
பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ
யார் சேர்த்ததோ

ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்சொல்லுங்கள்

பூமியில் மேகங்கள்
ஓடியாடும் யோகமே
மலையின் மீது
ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும்
காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல் தாயாகுமோ
ஆஆஆ

ஆயிரம்
மலர்களே
இருவர் : மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்சொல்லுங்கள்
ஆயிரம் மலர்களே மலருங்கள்