Aayiram Pookkal

Aayiram Pookkal Song Lyrics In English


ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்
அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது
அட என் கண்களோ இன்று மண் பார்த்தது
பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்

ஓடையில் பாடும் ராகம் என்ன
வாடைக் காற்றே சொன்னாலென்ன
வானம் தேடிப் போகும் மேகம்
வாசல் தேடி வந்தாலென்ன

பொன் அரும்புகள் எல்லாம்
பூவானது இன்று
ஆளானது கண்டு வந்து கூப்பிடும் வண்டு
பூக்கள் எல்லாம் தேனூட்டும்
போதை கொண்டு மனமோ
தள்ளாடும் இன்று

ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்
அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது
அட என் கண்களோ இன்று மண் பார்த்தது
பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்


மேகம் வந்து போர்த்துவதென்ன
பூக்களுக்கெல்லாம் பொன்னாடையோ
காலை நேரம் வெய்யில் ஏறும்
ஓடைகளெல்லாம் பொன் ஓடையோ

நான் ஊர்வலம் போக
ஒரு தேரில்லை மானே
பூந்தென்றலைத் தானே
நான் தேர்ந்தெடுத்தேனே
ஓடை நீரே என்னோடு
தாளம் போடு குயிலே பெண்ணோடு பாடு

ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்
அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது
அட என் கண்களோ இன்று மண் பார்த்தது
பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்