Aayiram Pookkal |
---|
ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்
அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது
அட என் கண்களோ இன்று மண் பார்த்தது
பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு
ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்
ஓடையில் பாடும் ராகம் என்ன
வாடைக் காற்றே சொன்னாலென்ன
வானம் தேடிப் போகும் மேகம்
வாசல் தேடி வந்தாலென்ன
பொன் அரும்புகள் எல்லாம்
பூவானது இன்று
ஆளானது கண்டு வந்து கூப்பிடும் வண்டு
பூக்கள் எல்லாம் தேனூட்டும்
போதை கொண்டு மனமோ
தள்ளாடும் இன்று
ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்
அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது
அட என் கண்களோ இன்று மண் பார்த்தது
பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு
ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்
மேகம் வந்து போர்த்துவதென்ன
பூக்களுக்கெல்லாம் பொன்னாடையோ
காலை நேரம் வெய்யில் ஏறும்
ஓடைகளெல்லாம் பொன் ஓடையோ
நான் ஊர்வலம் போக
ஒரு தேரில்லை மானே
பூந்தென்றலைத் தானே
நான் தேர்ந்தெடுத்தேனே
ஓடை நீரே என்னோடு
தாளம் போடு குயிலே பெண்ணோடு பாடு
ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்
அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது
அட என் கண்களோ இன்று மண் பார்த்தது
பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு
ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்