Aayiram Poovum Undu |
---|
ஆயிரம் பூவும் உண்டு
அது மல்லிகையைப் போல் ஆகுமா
ஆயிரம் மொழிகள் உண்டு
அவை செந்தமிழைப் போல் ஆகுமா
எத்தனை செல்வம் உண்டு
அவை அத்தனையும் நீ ஆகுமா
மண்ணில் எத்தனை இன்பம் உண்டு
அவை தத்தி வரும் சேய் ஆகுமா
என் கண்ணே கண்ணே
பசும் பொன்னே பொன்னே
புதுப் பூ வண்ணமே அன்னமே
நான் மெல்ல மெல்ல கையில் அள்ள அள்ள
வரும் தேன் கிண்ணமே சொர்ணமே
ஆயிரம் பூவும் உண்டு
அது மல்லிகையைப் போல் ஆகுமா
ஆயிரம் மொழிகள் உண்டு
அவை செந்தமிழைப் போல் ஆகுமா
ஒரு கணம் கூட நானும் நீயும்
பிரிவது பாவமே
தினசரி தாயின் பாச மழையில்
நனைந்திடும் தெய்வமே
நினைவோ இல்லாது
இந்த விழிதான் வாழாது
மழலைகள் பேசி நாள்தோறும்
முத்தாரம் சூடும் மோகனமே
என் கண்ணே கண்ணே
பசும் பொன்னே பொன்னே
புதுப் பூ வண்ணமே அன்னமே
ஆயிரம் பூவும் உண்டு
அது மல்லிகையைப் போல் ஆகுமா
மதுரையில் ஓடும் வைகை கூட
மணல்வெளி ஆகலாம்
கிழக்கினில் தோன்றும் கதிரும் நிலவும்
மேற்கினில் தோன்றலாம்
பாதை மாறாது
இந்தப் பாசம் மறையாது
இரவுகள் தோறும் நீ தூங்க
கண்ணே என் கைகள் ஊஞ்சலடி
என் கண்ணே கண்ணே
பசும் பொன்னே பொன்னே
புதுப் பூ வண்ணமே அன்னமே
ஆயிரம் பூவும் உண்டு
அது மல்லிகையைப் போல் ஆகுமா
ஆயிரம் மொழிகள் உண்டு
அவை செந்தமிழைப் போல் ஆகுமா
எத்தனை செல்வம் உண்டு
அவை அத்தனையும் நீ ஆகுமா
மண்ணில் எத்தனை இன்பம் உண்டு
அவை தத்தி வரும் சேய் ஆகுமா
என் கண்ணே கண்ணே
பசும் பொன்னே பொன்னே
புதுப் பூ வண்ணமே அன்னமே