Aayiram Vaanavil

Aayiram Vaanavil Song Lyrics In English


தானான நானா
நனனானா தனனனா
நநநன்னா ஆஆ ஆஆ

ஆயிரம் வானவில்
ஒன்றாய் சேர்ந்து ஓவியம்
வரைகிறதே ஓ ஆகாயத்தின்
விண்மீன் கூட்டம் கண் முன்
பூக்கிறதே

இது வரை யாரும்
எழுதா கவிதை மனதில்
தோன்றிடுதே புன்னகை
எல்லாம் சமுத்திரமாக
பொங்கி வழிகிறதே

இனி தினம் தோறும்
பூக்காலம் நம் மனதோடு
மழைக்காலம்

ஆயிரம் வானவில்
ஒன்றாய் சேர்ந்து ஓவியம்
வரைகிறதே ஆகாயத்தின்
விண்மீன் கூட்டம் கண் முன்
பூக்கிறதே

ஓஹோ மலையில்
பிறக்கும் அருவிகள் எல்லாம்
கடலில் கலக்கிறது

மலையில் பிறக்கும்
அருவிகள் எல்லாம் கடலில்
கலக்கிறது எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்த இதயங்கள்
இணைகிறது

கடவுள் ஒரு நாள்
பூமிக்கு வந்தால் இங்கே
வாழ விரும்பிடுவான்

சேர்ந்து சிரித்து
சேர்ந்து அழுது மீண்டும்
பிரிய தயங்கிடுவான்

நதியில் விழுந்த
நிலவின் பிம்பம் நனைவது
கிடையாது

அழகிய உறவுகள்
அருகில் இருந்தால்
சோகம் நமக்கேது

இனி தினம்
தோறும் பூக்காலம்
நம் மனதோடு மழைக்காலம்

ஆயிரம் வானவில்
ஒன்றாய் சேர்ந்து ஓவியம்
வரைகிறதே ஆகாயத்தின்
விண்மீன் கூட்டம் கண் முன்
பூக்கிறதே


நேற்று உருண்டு
நாளை ஆகும் காலம்
நிற்காது

ஓஹோ நேற்று
உருண்டு நாளை ஆகும்
காலம் நிற்காது மாற்றம்
கோடி வந்தால் கூட
மனங்கள் மாறாது

கல்லும் மண்ணும்
வீடா இல்லை அன்பில்
செய்தது வீடாகும்

கூட்டு புழுவுக்கு
கூட்டால் தானே வண்ணம்
நூறு உண்டாகும்

வேடந்தாங்கல்
பறவையை போல
ஒன்றாய் பறக்கிறது

காற்றில் கிளைகள்
தவழ்ந்தால் கூட வேரை
மதிக்கிறது

இனி தினம் தோறும்
பூக்காலம் நம் மனதோடு
மழைக்காலம்

ஆயிரம் வானவில்
ஒன்றாய் சேர்ந்து ஓவியம்
வரைகிறதே

ஓ ஆகாயத்தின்
விண்மீன் கூட்டம் கண்
முன் பூக்கிறதே

இது வரை யாரும்
எழுதா கவிதை மனதில்
தோன்றிடுதே புன்னகை
எல்லாம் சமுத்திரமாக
பொங்கி வழிகிறதே

இனி தினம் தோறும்
பூக்காலம் நம் மனதோடு
மழைக்காலம்

பெண் & ஆயிரம் வானவில்
ஒன்றாய் சேர்ந்து ஓவியம்
வரைகிறதே ஆகாயத்தின்
விண்மீன் கூட்டம் கண் முன்
பூக்கிறதே