Abinaya Sundari Aadukiral |
---|
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
தோம் தோம்த தக ததீம் தோம்
தோம் தோம்த தக தனத் தோம்
காப காப கப நீஸ நீஸ நிஸ
காப காப கப நீஸ நீஸ நிஸ
நீ மயிலுக்கு நாட்டியக் கலை
சொன்னவள்
அந்த மதனுக்கும் காதலின் பொருள்
சொன்னவள்
ஆஆஆஆஆஆஆஆ
நீ மயிலுக்கு நாட்டியக் கலை
சொன்னவள்
அந்த மதனுக்கும் காதலின் பொருள்
சொன்னவள்
அழகிய மேகலை அசைவதும் ஓர் கலை
உனதுடல் மிருதங்கமே
பல வகை தாளங்கள்
சுகம் தரும் நாதங்கள்
பயில்வது சுகமல்லவோ
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
உன் சிறு இடை என்பது இடைச்
சங்கமோ
உன் சதங்கையில் வந்தது தமிழ்ச்
சந்தமோ
உன் சிறு இடை என்பது இடைச்
சங்கமோ
உன் சதங்கையில் வந்தது தமிழ்ச்
சந்தமோ
இளமையின் சீதனம் இசையினில் மோகனம்
என்பதும் நீயல்லவோ
ஆஆஆஆஆஆஆஆ
கவி நயம் மேவிடும் இலக்கியம் யாவிலும்
கற்பனை நீயல்லவோ
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்
ஆஆஆஆஆஆஆஆ