Abiraamiyae Umaa Mahaeswari |
---|
ஹஆஅஆஅஆஅ
அபிராமியே உமா மகேஸ்வரி
சிவகாமியே கலா ஜடாதரி
அபிராமியே உமா மகேஸ்வரி
சிவகாமியே கலா ஜடாதரி
சாம வேதம் ஓதும் நீலகண்டன்
வாம பாதம் வாழும் ஈஸ்வரி
காமகோடி பீடம் ஆளுகின்ற
நாமம் கோடி போற்றும் சங்கரி
தீயசக்தி உன் தளத்தில் மாய
தெய்வசக்தி மாநிலத்தில் வாழ
வருக வருக வந்து வரமருளே
அபிராமியே உமா மகேஸ்வரி
சிவகாமியே கலா ஜடாதரி
ஹாஆஅஹாஆஅஆ
ஹாஆஅஹாஆஅஆ
ஹாஆஅஹாஆஅஆ
ஹாஆஅஹாஆஅஆ
பூங்காற்று தாலாட்டும் மாங்காட்டில்
நீங்காத ஓம்காரி நீயே
பாம்போடு வேம்பாடும் வேற்காட்டில்
அருளாட்சி புரிகின்ற தாயே
நான்கு வேதமும்
பஞ்ச பூதமும்
ஆறு காலங்கள்
ஏழு லோகமும் எட்டுத் திக்குமும்
ஏற்கும் பாதங்கள்
தேவர் தம்மோடு மூவரும்
இடைவிடாது
பணியும் கருணைக் கடலே
பாவம் மேலோங்குமோ
தருமம் கீழாகுமோ
ஹோ ஓ ஓஹோ ஓ ஓ
பூமி தடுமாறவே
பேய்கள் நடமாடுமோ
ஹோ ஓ ஓஹோ ஓ ஓ
வினையில் விளையும் பகையும்
துயரும் பொடிபட
வருக வருக வந்து வரமருளே
அபிராமியே உமா மகேஸ்வரி
சிவகாமியே கலா ஜடாதரி
ஹாஆஅஹாஆஅஆ
ஹாஆஅஹாஆஅஆ
காஞ்சி நகர் வாழும்
காமாட்சியே
கையில் கிளி ஏந்தும்
மீனாட்சியே
ஏழு உலகுனது அரசாட்சியே
என்ன நடந்தாலும் நீ சாட்சியே
மூடனுக்கும் வாழ்வளித்த தாயே
மூலமான ஆதி சக்தி நீயே
மகிஷாசுரன் செய்த
வினை தீர்த்தவள்
முருகேசனின் கையில்
வேல் சேர்த்தவள்
அபிராமி பட்டர்க்கும்
நூல் தந்தவள்
சம்பந்தன் அழும் போது
பால் தந்தவள்
வேண்டும் வரம் தர தேவி
திருமுகம் மீண்டும் மலர்ந்திடுமோ
ஈன இருளிடை ஞான ஒளிவர
பொழுது புலர்ந்திடுமோ
பத்ரகாளி வருக ருத்ரகாளி வருக
சிம்மமேறி வருக சீற்றமோடு வருக
சூலி நீலி அம்மா தாயே ஜனனி