Adada Ithuthan |
---|
அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ் வழி
பனி மழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழாக் கோலமே
அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ் வழி
பனி மழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழாக் கோலமே
விழிகளும் விழிகளூம் தழுவிடும் பொழுதினில்
ஏதோ ஏதோ லீலைகள்
விரல்களூம் விரல்களும் உரசிடும் பொழுதினில்
காதல் தீயின் ஜுவாலைகள்
கன்னங்களில் தாமரை காதல் தூவும்
சின்னங்களின் தேன் மழைச்சாரல் வீசும்
கருங்கூந்தலின் ஊஞ்சலில் பூக்கள் ஆடும்
அடடா ஆஹா
இதுதான் ஓஹோ ஹோ
சுகமோ
மலர்களின் இதழ் வழி
பனி மழை விழும் சுகமோ
இருவர் : இனிமேல் தினமும் விழாக் கோலமே
ஒரு கொடி இடையினில் இரு குடை பிடித்தது
ஏனோ ஏனோ கண்மணி
தழுவிடும் இருவரின் நிலவொளி சுடுவது
நேரம் இதோ பவுர்ணமி
நீலோர்பனம் கண்ணிலே ஜாடை காட்டும்
நான் தொட்டதும் குங்குமம் சாயம் தீட்டும்
குழல் வீணையின் தந்திகள் எனை மீட்டும்
அடடா இதுதான் சுகமோ
அடடா ஆஹா
இதுதான் ஆஹா
சுகமோ
மலர்களின் இதழ் வழி
பனி மழை விழும் சுகமோ
இருவர் : இனிமேல் தினமும் விழாக் கோலமே
இருவர் : லல்லாலால லல்லாலால
லல்லாலால லல்லாலால