Adada Onnum Solladha |
---|
அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத
அடடா பிரம்மன்
என பூப்போல படைச்சானே
இதழில் தேன் எடுக்க நீ வரியா
ஆனால் பார்வையைத்தான்
தீப்போல கொடுத்தானே
ஹைய்யோ உன்னால்
எரிஞ்சேன் நானே
அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத
அடடா பிரம்மன்
உன்னை பூப்போல படைச்சானே
இதழில் தேன் எடுக்க நான் வரவா
ஆனால் பார்வையைத்தான்
தீப்போல கொடுத்தானே
ஹைய்யோ பெண்ணே
எரிஞ்சேன் நானே
வயதும் மனதும்
உனைக் கண்டாலே
இன்று கலங்குதடா
நான் துடிப்பேன்
வல்லினம் மெல்லினம்
இவை தமிழோடு உண்டு
இடையினம்தான்
நான் ரசிப்பேன்
ஹோ குறும்பாக நீ சிரிக்க
சாஞ்சி போனேன்
அதற்கு இந்த ஊரில்
இல்லை விலையே
ஐம்பொன்னில் பஞ்சும்
கொஞ்சம் சேர்த்துதானே
அழகாக செஞ்சு
வைச்ச சிலையே
இருவர் : இரு இதயம் இணையும்
தருணம் போகாதே
அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத
இதழும் இதழும்
அடி ஒன்றாக சேர
விரும்பிடுதே நெருங்கிடுதே
இளமைக் கரையில்
ஒரு புயல் வந்து சீண்ட
இடைவெளிகள் குறைந்திடுதே
சிரிச்சாலே கன்னம்
எங்கும் வண்ணம் பூசும்
அழகான பஞ்சவர்ண கிளியே
சில நேரம் உன்னை எண்ணி
உள்ளம் தேடும்
சீ போடா சிக்க வைச்ச
என்னையே
இருவர் : இரு இதயம் இணையும்
தருணம் போகாதே
அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
ஹேய் அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத