Adhikaalai Neram

Adhikaalai Neram Song Lyrics In English


அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்

அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்

விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்

லல லால லால லால லால லாலா
லல லால லால லால லால லாலா

முல்லைப் பூவை மோதும்
வெண் சங்கு போல ஊதும்

காதல் வண்டின் பாட்டு
காலம் தோறும் கேட்டு

வீணை போல உன்னை
கை மீட்டும் இந்த வேளை

நூறு ராகம் கேட்கும்
நோயைக் கூட தீர்க்கும்

பாதிப் பாதியாக
சுகம் பாக்கி இங்கு ஏது
மீதம் இன்றித் தந்தாள்
எனை ஏற்றுக் கொண்ட மாது

தேவியே மேவிய
ஜீவனே நீதான்
நீ தரும் காதலில்
வாழ்பவள் நான்தான்

நீ இல்லாமல் நானும் இல்லையே

அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்
விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்

அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்


மாலை ஒன்று சூடும்
பொன் மேனி ஆரம் சூடும்

மாதம் தேதி பார்த்து
மனது சொல்லிக் கேட்டு

வேளை வந்து சேரும்
நம் விரகம் அன்று தீரும்

நீண்ட கால தாகம்
நெருங்கும் போது போகும்

காடு மேடு ஓடி
நதி கடலில் வந்து கூடும்
ஆசை நெஞ்சம் இங்கே
தினம் அனலில் வெந்து வாடும்

வாடலும் கூடலும்
மன்மதன் வேலை
வாழ்வது காதல்தான்
பார்க்கலாம் நாளை

பூர்வ ஜென்ம பந்தம் அல்லவோ

அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்

விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்

லல லால லால லால லால லாலா

லல லால லால லால லால லாலா