Adho Andha Nathiyoram

Adho Andha Nathiyoram Song Lyrics In English


பாடகி  : எஸ் ஜானகி

பாடலாசிரியர்  : வாலி

அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம் இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்

அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம் இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்

அவன் வருகின்ற நேரம் நான் தழுவிட வேண்டும் இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி

அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம் இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்



தூது செல்லடி தோழி வான்மதி மாது நிம்மதி மறைந்ததடி குறைந்ததடி சேதி சொல்லடி தேனின் நாயகி தேகம் பாதியாய் கரைந்ததடி கலங்குதடி

அணை போட்ட போதும் நிலை மாறிடாது அலை போல மோதும் மனம் தாங்கிடாது நீ இல்லாத போதிலே வாழ்வதேது காதலே நினைக்காத நேரம் ஏது வாடும் போது கூறு தூது

அவன் வர வேண்டும் நான் தழுவிட வேண்டும் இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி


அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம் இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்



கூடல் என்பது கூடி வந்தது தேடி வந்தது திரை மறைவில் தெரிகிறது தேகம் என்பது கோவில் போன்றது யாகம் செய்ய வா பலன் உடனே கிடைக்கின்றது

சுகம் மாலை சூடும் தினம் ராகம் பாடும் சுவை நாளும் கூடும் துயர் யாவும் ஓடும் காதல் என்ற தேகமே ஆளுகின்ற யோகமே கலைக் கோயில் தீபம் ஏற்று பாடிப் போற்று ஆசை ஊற்று

கரம் தொடும் போது சுக வரம் தரும் மாது இரு கரம் தொடும் போது சுக வரம் தரும் பூமாது

அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம் இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்

அவன் வர வேண்டும் நான் தழுவிட வேண்டும் இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி

அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம் இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்