Adho Vaanile Orayiram

Adho Vaanile Orayiram Song Lyrics In English


பாடலாசிரியர் : எஸ் ஏ ராஜ்குமார்

ருக்கு ருக்கு ருக்கு ருக்கு ஹைய்ய்யாஆஆ

அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது பூம்பனியிலே நனைகிறேன் இனிமையே நெஞ்சை தழுவுதே புதுமையாய் பூங்காற்றே

சந்தன மலர்கள் ஆட என்னுடன் குயில்கள் பாட இன்று கண்டேன் இளமையின் நடனம்

அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது

மழையில் யுவராணி மலராடைக் கண்டு இவனின் மனம் பாடும் மலை நாட்டு சிந்து நதியின் தாலாட்டில் பொன் மீன்கள் துள்ளும் இவனின் பாராட்டில் கவி ஒன்று சொல்லும்

கண் காணாத ஓர் காட்சி கண்டேன் நான் ஓர் வார்த்தை பேசாமல் நின்றேன் கண் காணாத ஓர் காட்சி கண்டேன் நான் ஓர் வார்த்தை பேசாமல் நின்றேன்

கையை தழுவியது தென்றல் பழகியது மின்னல் ஒன்று பறந்தது மனது


அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது ஹ்ஹாஆஆ இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது யே ஹ்ஹூ

பொதிகை மேகங்கள் நீர் கொண்டு செல்லும் புதிய வாசங்கள் பூந்தோட்டம் எங்கும் இனிய சங்கீதம் மகுடங்கள் சூடும் இளைய மான் கூட்டம் என்னோடு கொஞ்சும்

பெண் பூவொன்று தன் பேரை சொல்ல நான் ஆகாய தேசத்தில் துள்ள பெண் பூவொன்று தன் பேரை சொல்ல நான் ஆகாய தேசத்தில் துள்ள

என்னில் முதல் மயக்கம் கண்டேன் புது உலகம் எங்கும் இன்றும் மலர்ந்தது வசந்தம்

அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது பூம்பனியிலே நனைகிறேன் இனிமையே நெஞ்சை நழுவுதே புதுமையாய் பூங்காற்றே

சந்தன மலர்கள் ஆட என்னுடன் குயில்கள் பாட இன்று கண்டேன் இளமையின் நடனம் ஹ்ஹா

அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது ஹ்ஹாஆஆ இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது ஹ்ஹூ