Adi Marivantha |
---|
அடி மாறி வந்த மயிலே
இப்ப மழையடிக்கப் போகுதடி
ஏறி வந்த வெயிலே
இப்ப ஏழைகள வாட்டுதடி
மாறி வந்த மயிலே
இப்ப மழையடிக்கப் போகுதடி
ஏறி வந்த வெயிலே
இப்ப ஏழைகள வாட்டுதடி
அம்மா நீ நெனச்சதும்
அப்படியே நடக்குது
செல்வாக்கும் வசதியும் காலடியில் கிடக்குது
கண்ணால் ஒரு சாட செஞ்சா
காள மாடும் கண்ணு போடும்
மாறி வந்த மயிலே
இப்ப மழையடிக்கப் போகுதடி
மாறி வந்த மயிலே
ஆள் இருந்தா காவலுக்கு
ஆடு வந்து மேயுமா
ஆடு வந்து மேஞ்சதுக்கு
பாட்டுச் சொன்னா போதுமா
கண்ணே கண்ணம்மா ஆ ஆ
கண்ணே கண்ணம்மா எங்க கச்சேரி கேக்கணுமா
பக்க வாத்தியமா சட்டி பானைகள் போதுமம்மா
ஏழை சொல்லு தான் ஒரு நாள் அம்பலத்தில் ஏறுமம்மா
ஏறி விட்டா மேலும் கீழும் ஒண்ணு போல மாறுமம்மா
சொன்னாக்கா ஏத்துக்கோ ஒன்ன நீயும் மாத்திக்கோ
எல்லாருக்கும் எல்லாம் என்று
பாடும் பாட்ட காதில் வாங்கு
மாறி வந்த மயிலே
இப்ப மழையடிக்கப் போகுதடி
ஏறி வந்த வெயிலே
இப்ப ஏழைகள வாட்டுதடி
அம்மா நீ நெனச்சதும் அப்படியே நடக்குது
செல்வாக்கும் வசதியும் காலடியில் கிடக்குது
கண்ணால் ஒரு சாட செஞ்சா
காள மாடும் கண்ணு போடும்
மாறி வந்த மயிலே
இப்ப மழையடிக்கப் போகுதடி
ஏறி வந்த வெயிலே
இப்ப ஏழைகள வாட்டுதடி
மாறி வந்த மயிலே
கை நிறைய காசிருக்கும் பைங்கிளியே சொர்ணமே
காசெடுத்து நீ கொடுத்தா குயிலு வந்து கூவுமே
பொன்னே பொன்னம்மா ஆ ஆ
பொன்னே பொன்னம்மா ஏழ பாடிட சம்மதமா
ஹேய் மானே எம் பாட்ட உங்க மாளிக ஒத்துக்குமா
பட்டு மெத்ததான் உனக்கு கோரப் புல்லா மாறிடுச்சா
பட்டிதிலே வெச்ச பாலும் எட்டிக் காயா ஆயிடுச்சா
ஏழப் பாட்டக் கேக்குற ஏறெடுத்து பாக்குற
என்ன ஆச்சு ஏது ஆச்சு மானே தேனே நீயும் சொல்லு
மாறி வந்த மயிலே
இப்ப மழையடிக்கப் போகுதடி
ஏறி வந்த வெயிலே
இப்ப ஏழைகள வாட்டுதடி
அம்மா நீ நெனச்சதும் அப்படியே நடக்குது
செல்வாக்கும் வசதியும் காலடியில் கிடக்குது
கண்ணால் ஒரு சாட செஞ்சா
காள மாடும் கண்ணு போடும்
மாறி வந்த மயிலே
இப்ப மழையடிக்கப் போகுதடி
ஏறி வந்த வெயிலே
இப்ப ஏழைகள வாட்டுதடி
மாறி வந்த மயிலே
இப்ப மழையடிக்கப் போகுதடி
ஏறி வந்த வெயிலே
இப்ப ஏழைகள வாட்டுதடி
மாறி வந்த மயிலே