Adi Netriravu |
---|
அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ
தித்தித்தது நெஞ்சம்
சம்சம் சம்
தென்பட்டது கொஞ்சம்
சம்சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே
சொல்லியது பத்தாதோ
அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ
பத்து விரல் பட்டால் என்ன
முத்த மழை இட்டால் என்ன
ஆஹா ஆஹா ஆஹா
பொன்னே மணியே
பட்டு உடல் சுட்டால் என்ன
வெட்கம் அதை விட்டால் என்ன
ஆஹா ஆஹா ஆஹா
அன்பே அமுதே
கங்கை நதி நீராட
கண்ணன் வரத்தான்
மங்கை மடி சீராட
மன்னன் வரத்தான்
ஒரு புதிய மயக்கம்
உனக்கும் எனக்கும்
கூடி வரும் நாள் இது நேற்றிரவு
அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ
தித்தித்தது நெஞ்சம்
சம்சம் சம்
தென்பட்டது கொஞ்சம்
சம்சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே
சொல்லியது பத்தாதோ
அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ
அந்தப்புர சந்தோஷங்கள்
அர்த்த ஜாம சங்கீதங்கள்
ஆஹா ஓஹோ ஏஹே
உன்னால் வந்ததே
தென்பொதிகைச் சாரல் என
சின்ன மணித் தூரல் என
ம்ஹும் ஆஹா ஓஹோ
இன்பம் தந்ததே
முன் பின் மனம் காணாத அன்பின் விளக்கம்
முற்றுப் புள்ளி இல்லாமல் இங்கே கிடைக்கும்
இனி முதுமை வரையில் நமது உறவு
ஓடி வரக் கூடுமே
நேற்றிரவு
அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ
தித்தித்தது நெஞ்சம்
சம்சம் சம்
தென்பட்டது கொஞ்சம்
சம்சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே
சொல்லியது பத்தாதோ
அடி நேற்றிரவு நடந்ததென்ன
ஆஹ ஹஹா ஹா
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ