Adi Yendiyamma En |
---|
அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா அவன் ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா
அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா அவன் ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா
அவன் மாட்டிலேறி காடு சுற்றும் மன்னனாமடி அவன் மாட்டிலேறி காடு சுற்றும் மன்னனாமடி எனை மார்பில் வைத்து மூன்று வேதம் சொல்லுவானடி அடி ஏண்டியம்மா
அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா
தோள்மீது பூமியெல்லாம் தூக்கி வைத்தான்டி அந்த சுகவாசி உலகில் எதை பாக்கி வைத்தான்டி ஆண்டி
தோள்மீது பூமியெல்லாம் தூக்கி வைத்தான்டி அந்த சுகவாசி உலகில் எதை பாக்கி வைத்தான்டி ஆண்டி
சம்சாரம் என்று என்னை ஆக்கி வைத்தான்டி சம்சாரம் என்று என்னை ஆக்கி வைத்தான்டி உடல் சாயச் சாய இன்பம் தன்னை தேக்கி வைத்தான்டி
அடி ஏண்டியம்மா அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா
காணாத சாத்திரங்கள் கத்துத் தந்தான்டி என் கட்டான உடலைக் கொஞ்சம் தொட்டுத் தந்தான்டி
காணாத சாத்திரங்கள் கத்துத் தந்தான்டி என் கட்டான உடலைக் கொஞ்சம் தொட்டுத் தந்தான்டி
தேனான இதழைத் தொட்டு சேதி சொன்னான்டி சுகம் திரளத் திரளக் கண்டவள் நான் உனக்கும் முன்னாடி
அடி ஏண்டியம்மா அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா
பூப்போட்ட கன்னமெங்கும் புதுமை செய்தான்டி தன் பூஜை கண்ட அவனும் என்னை பூஜை செய்தான்டி ஆண்டி
பூப்போட்ட கன்னமெங்கும் புதுமை செய்தான்டி தன் பூஜை கண்ட அவனும் என்னை பூஜை செய்தான்டி ஆண்டி
கைலாயம் போல நெஞ்சைக் கட்டிக் கொண்டான்டி கைலாயம் போல நெஞ்சைக் கட்டிக் கொண்டான்டி
சுகம் கனியக் கனிய எந்தன் கையில் சிக்கிக் கொண்டான்டி
அடி ஏண்டியம்மா அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா அவன் ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா
அடி ஏண்டியம்மா அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா