Agalathey Vilagathey |
---|
அன்பே நீ ஏற்பாயோ
எந்தன் உயிர் காதல்
உன்னோடு நான் வாழ வேண்டும்
அன்பே உன் பார்வைகள்
நெஞ்சுகுள்ளே சாரல்
சட்டென்று தோள் சாய தோன்றும்
அகலாதே விலகாதே
நொடி நேரம் எனையே
நெடு நாளாய் மனம் ஏங்கும்
துணை நீயே
சில நேரம் சருகாய்
விதி ஏனோ உதிர்ந்தேன்
சிறகே நீ கிடைத்தாயே
பறந்தேனே
அன்பென்ற காட்டில்
அல்லாடும் பெண்ணே
என் காதல் சொல்லவா
மௌனங்கள் பேசும்
உன் வார்த்தை கோர்த்து
அர்த்தங்கள் சொல்லிடவா
நெஞ்சோடு சாய்த்து
கொஞ்சி நான் பேச
உள்ளூர ஆசைதான்
என்றாலும் ஏனோ
சொல்லாமல் போனேன்
பொய்யான வேஷத்தில் நான்
சத்தங்கள் இல்லா ஒத்திகையை
நித்தமும் உன்னால் கற்றேனடி
குயில் ஓசை மழை ஓசை அறியாதே உயிரே
இவை யாவும் இனி நானே உனதானேன்
உளியோசை உணராமல்
வழி தாங்கும் சிலையே
இமை கூட உதிராமல்
உன்னை காப்பேன்
கண்ணே நீ கேளாயோ
நெஞ்சம் சொல்லும் பாடல்
எப்போதும் உன் பேரை சொல்லும்
அன்பே உன் பார்வைகள்
நெஞ்சுக்குள்ளே சாரல்
சட்டென்று தோள் சாய தோன்றும்
குயில் ஓசை மழை ஓசை அறியாதே உயிரே
இவை யாவும் இனி நானும் உனதானேன்
சில நேரம் சருகாகி விதி ஏனோ உதிர்ந்தேன்
சிறகே நீ கிடைத்தாயே பறந்தேனே