Agaramuthala

Agaramuthala Song Lyrics In English


அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி ஆதி பகவன்
முதலென்றே உணர
வைத்தாய் தேவி

இயல் இசை
நாடக தீபம் ஏற்றி
வைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சை
இன்று குளிர வைத்தாய்
தாயே

அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி

ஆதி பகவன்
முதலென்றே உணர
வைத்தாய் தேவி ஆதி
பகவன் முதலென்றே
உணர வைத்தாய் தேவி

அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி

இயல் இசை
நாடக தீபம் ஏற்றி
வைத்தாய் இயல் இசை
நாடக தீபம் ஏற்றி
வைத்தாய்

ஈன்றவர் நெஞ்சை
இன்று குளிர வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை
இன்று குளிர வைத்தாய்

உயிர் மெய்
எழுத்தெல்லாம் தெரிய
வைத்தாய் உயிர் மெய்
எழுத்தெல்லாம் தெரிய
வைத்தாய்

ஊமையின்
வாய் திறந்து பேச
வைத்தாய் அம்மா
பேசவைத்தாய்

அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி

எண்ணும் எழுத்து
எண்ணும் கண் திறந்தாய்
எண்ணும் எழுத்து எண்ணும்
கண் திறந்தாய்


ஏற்றம் தரும்
புலமை ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை
ஆற்றல் தந்தாய்

ஐயம் தெளிய
வைத்து அறிவு தந்தாய்
ஐயம் தெளிய வைத்து
அறிவு தந்தாய்

ஒளி தந்து
மொழி தந்து குரல்
தந்தாய் ஒளி தந்து
மொழி தந்து குரல்
தந்தாய்

ஓம்கார இசை
தந்து உயர வைத்தாய்
தேவி

போற்றவைத்து
புகழ் சாற்றவைத்து
அறிவூற்றினோடு உயர்
ஆற்றல் தந்து என்னை
அறிஞன் கவிஞன் கலைஞன்
இவன் என அருளும் தமிழும்
திகழும் கடல் என

கற்றவரும்
கொற்றவரும் முற்றுமே
அறிந்தவரும் நித்தம் நித்தம்
புகழ்ந்திட நின்னருளை தந்து
அருள் வாய்

உற்றார் சுற்றம்
உறவினர் மாந்தரை
யானை சேனை படையுடை
வேந்தரு

பற்றும் பற்றை
நீக்கிய ஞானி பலரும்
புகழ்ந்திட ஆக்கிய
வாணி

தாய் இல்லாத
பிள்ளை என்று வாய்
இல்லாத ஊமை என்று
ஆயிரங்கள் ஆன கல்வி
வாய் திறந்து தந்த செல்வி
அன்னை உன்னை சரணம்
அடைந்தேன் தேவி