Agaramuthala |
---|
அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி ஆதி பகவன்
முதலென்றே உணர
வைத்தாய் தேவி
இயல் இசை
நாடக தீபம் ஏற்றி
வைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சை
இன்று குளிர வைத்தாய்
தாயே
அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி
ஆதி பகவன்
முதலென்றே உணர
வைத்தாய் தேவி ஆதி
பகவன் முதலென்றே
உணர வைத்தாய் தேவி
அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி
இயல் இசை
நாடக தீபம் ஏற்றி
வைத்தாய் இயல் இசை
நாடக தீபம் ஏற்றி
வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை
இன்று குளிர வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை
இன்று குளிர வைத்தாய்
உயிர் மெய்
எழுத்தெல்லாம் தெரிய
வைத்தாய் உயிர் மெய்
எழுத்தெல்லாம் தெரிய
வைத்தாய்
ஊமையின்
வாய் திறந்து பேச
வைத்தாய் அம்மா
பேசவைத்தாய்
அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி
எண்ணும் எழுத்து
எண்ணும் கண் திறந்தாய்
எண்ணும் எழுத்து எண்ணும்
கண் திறந்தாய்
ஏற்றம் தரும்
புலமை ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை
ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளிய
வைத்து அறிவு தந்தாய்
ஐயம் தெளிய வைத்து
அறிவு தந்தாய்
ஒளி தந்து
மொழி தந்து குரல்
தந்தாய் ஒளி தந்து
மொழி தந்து குரல்
தந்தாய்
ஓம்கார இசை
தந்து உயர வைத்தாய்
தேவி
போற்றவைத்து
புகழ் சாற்றவைத்து
அறிவூற்றினோடு உயர்
ஆற்றல் தந்து என்னை
அறிஞன் கவிஞன் கலைஞன்
இவன் என அருளும் தமிழும்
திகழும் கடல் என
கற்றவரும்
கொற்றவரும் முற்றுமே
அறிந்தவரும் நித்தம் நித்தம்
புகழ்ந்திட நின்னருளை தந்து
அருள் வாய்
உற்றார் சுற்றம்
உறவினர் மாந்தரை
யானை சேனை படையுடை
வேந்தரு
பற்றும் பற்றை
நீக்கிய ஞானி பலரும்
புகழ்ந்திட ஆக்கிய
வாணி
தாய் இல்லாத
பிள்ளை என்று வாய்
இல்லாத ஊமை என்று
ஆயிரங்கள் ஆன கல்வி
வாய் திறந்து தந்த செல்வி
அன்னை உன்னை சரணம்
அடைந்தேன் தேவி