Alai Alai Alai |
---|
அலை அலை அலை அலையென உன்னை கண்டேன் கரை கரை கடற்கரை என காதல் கொண்டேன் தொலை தொலை தொலை தொலைவினில் நெஞ்சம் வைத்தேன் அதை அதை உனதலைகளில் மீண்டும் கண்டேன் குறில் குறில் என வாழ்ந்தேனே தன்னந்தனி ஆளாய் நெடில் நெடில் என ஆனேனே நீ என் துணைக்காளாய் அழகே அலையே எதிர்பாரா ஒரு நேரத்தில் என் கால்கள் இழுப்பது ஏன்
கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று உரசிடும் ஓசைகள் இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே முகில் குலுங்கி முகில் குலுங்கி வீழ்ந்திடும் தூறலாய் அலைகடலே உனதுடலில் வீழ்கிறேன் வீழ்கிறேன் ஆழமாய் உன்னிலே வீழ்கிறேனே அலை அலை அலை அலை என பாய்ந்தேன் அன்பே கரை கரை கடற்கரை உன்னில் சாய்ந்தேன் அன்பே தொலை தொலை நெடுந்தொலைவினில் தோன்றி வந்தேன் நுரையுடன் மணல் மடியினில் என்னை தந்தேன்
வழி தவறியே சென்றேனே தன்னந்தனி மீனாய் உனை உனை வழி கேட்டேனே நீயே வழி ஆனாய் கனவே கரையே இனி எப்போதும் எந்நாளும் என் வாழ்வில் விடுமுறையே
கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று உரசிடும் ஓசைகள் இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே முகில் குலுங்கி முகில் குலுங்கி வீழ்ந்திடும் தூறலாய் மணல் மடியில் ஒரு நொடியில் வீழ்கிறேன் வீழ்கிறேன் ஆழமாய் உன்னிலே வீழிகிறேனே
ஓ ஈழத்தின் பூங்காற்று இன்று என் மீது மோதி செல்ல
ஓ போகின்ற போதெந்தன் மார்பில் உன் பேரை தீட்டி செல்ல
ஏய் ஏய் தமிழை சுவைக்க தவம்கிடந்த காதிலே தேன்தமிழ் பாடலாய் தோன்றினாயே
கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று உரசிடும் ஓசைகள் இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே
இயந்திரங்கள் நடுவினிலே எனை மறந்த போதிலே உயிர் துணையாய் உயிர் துணையாய் தோன்றினாய் தோன்றினாய் தோழனாய் தோழனாய் தோன்றினாய்
அலை அலை அலை அலை என பாய்ந்தேன் அன்பே
கரை கரை கடற்கரை இனில் சாய்ந்தேன் அன்பே
தொலை தொலை நெடுந்தொலைவினில் தோன்றி வந்தேன்
நுரையுடன் மணல் மடியினில் என்னை தந்தேன்
வழி தவறியே சென்றேனே தன்னந்தனி மீனை உனை உனை வழி கேட்டேனே நீயே வழி ஆனாய்
இருவர் : கனவே கரையே இனி எப்போதும் எந்நாளும் என் வாழ்வில் விடுமுறையே
கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று உரசிடும் ஓசைகள் இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே
முகில் குலுங்கி முகில் குலுங்கி வீழ்ந்திடும் தூறலாய் மணல் மடியில் ஒரு நொடியில் வீழ்கிறேன் வீழ்கிறேன்
ஆழமாய் உன்னிலே வீழ்கிறேனே
காதலாய் தோன்றினாய் காதலாய் தோன்றினாய்