Alamara Pondhu |
---|
ஆலமரப் பொந்துக்குள்ள
வாழவந்த குருவிகளா
காத்திருந்த வேடன் இங்கே
கண்ணி வச்சான் அறிவீகளா
பெண் குருவி சிக்கிடுமா அது
மந்திரத்தில் சொக்கிடுமாஹோய்
பெண் குருவி சிக்கிடுமா அது
மந்திரத்தில் சொக்கிடுமாஹோய்
கண்ணியில சிக்காதய்யா
கானாங்குருவி ரோஷக்காரக் குருவி
பத்தினிப் பொண்ணு இவ
பாத்தாக் குறிஞ்சி கிட்ட வந்தா நெருஞ்சி
கண்ணியில சிக்காதய்யா
கானாங்குருவி ரோஷக்காரக் குருவி
பத்தினிப் பொண்ணு இவ
பாத்தாக் குறிஞ்சி கிட்ட வந்தா நெருஞ்சிஹோய்
அண்டமெங்கும் மழையும் அடிக்க
மண்டபத்தில் எடமுங்குடுக்க
ஒண்ட வந்த திருட்டுச்சாமி
மடத்தப் புடுங்குறான்
சாதி சனம் அருகில் இருக்க
சந்தர்ப்பமும் நெளிஞ்சு கொடுக்க
புத்தி கெட்ட பெரிய மனுஷன்
புடவை திருடுறான்
தாலி கட்டி வச்ச பயதான்
வேலி கட்டி வைக்க மறந்தான்
தந்தனானா தந்தனத் தந்தானா
தந்தனானா தந்தனத் தந்தானா
காமங் கொண்ட ஆம ஒண்ணு
பூந்திருச்சு வீட்டுக்குள்ள
கற்பரசி கண்ணகிக்குத் தங்கை
இந்தச் சின்னப்புள்ளஹோய்
தந்தனதந்தனதந்தனதந்தனனா
கண்ணியில சிக்காதய்யா
கானாங்குருவி ரோஷக்காரக் குருவி
பத்தினிப் பொண்ணு இவ
பாத்தாக் குறிஞ்சி கிட்ட வந்தா நெருஞ்சி
கோவணத்தில் இருந்த பொழுதும்
கோபுரத்தில் இருந்த பொழுதும்
அதுக்கொரு மதிப்பு இல்ல
அழுக்கு அழுக்குத்தான்
சீதமகள் அழுத கணக்கு
தேகமெங்கும் நெறைய இருக்கு
இன்னுமது முடியவில்ல
வழக்கு வழக்குத்தான்
எங்க ஊருப் பொண்ணு அப்போதே
சூரியனக் கட்டி வச்சாளே
எங்க ஊருப் பொண்ணு அப்போதே
சூரியனக் கட்டி வச்சாளே
சுத்தமுள்ள உத்தமி தான்
தீயெடுத்து சுட்டு வச்சா
பத்தினிங்க பாதையில
எங்க பொண்ணு எட்டு வச்சாடோயா
தந்தனதந்தனதந்தனதந்தனனா
கண்ணியில சிக்காதய்யா
கானாங்குருவி ரோஷக்காரக் குருவி
பத்தினிப் பொண்ணு இவ
பாத்தாக் குறிஞ்சி கிட்ட வந்தா நெருஞ்சி