Alamara Pondhu

Alamara Pondhu Song Lyrics In English


ஆலமரப் பொந்துக்குள்ள
வாழவந்த குருவிகளா
காத்திருந்த வேடன் இங்கே
கண்ணி வச்சான் அறிவீகளா
பெண் குருவி சிக்கிடுமா அது
மந்திரத்தில் சொக்கிடுமாஹோய்
பெண் குருவி சிக்கிடுமா அது
மந்திரத்தில் சொக்கிடுமாஹோய்

கண்ணியில சிக்காதய்யா
கானாங்குருவி ரோஷக்காரக் குருவி
பத்தினிப் பொண்ணு இவ
பாத்தாக் குறிஞ்சி கிட்ட வந்தா நெருஞ்சி

கண்ணியில சிக்காதய்யா
கானாங்குருவி ரோஷக்காரக் குருவி
பத்தினிப் பொண்ணு இவ
பாத்தாக் குறிஞ்சி கிட்ட வந்தா நெருஞ்சிஹோய்

அண்டமெங்கும் மழையும் அடிக்க
மண்டபத்தில் எடமுங்குடுக்க
ஒண்ட வந்த திருட்டுச்சாமி
மடத்தப் புடுங்குறான்

சாதி சனம் அருகில் இருக்க
சந்தர்ப்பமும் நெளிஞ்சு கொடுக்க
புத்தி கெட்ட பெரிய மனுஷன்
புடவை திருடுறான்

தாலி கட்டி வச்ச பயதான்
வேலி கட்டி வைக்க மறந்தான்
தந்தனானா தந்தனத் தந்தானா
தந்தனானா தந்தனத் தந்தானா
காமங் கொண்ட ஆம ஒண்ணு
பூந்திருச்சு வீட்டுக்குள்ள
கற்பரசி கண்ணகிக்குத் தங்கை
இந்தச் சின்னப்புள்ளஹோய்
தந்தனதந்தனதந்தனதந்தனனா


கண்ணியில சிக்காதய்யா
கானாங்குருவி ரோஷக்காரக் குருவி
பத்தினிப் பொண்ணு இவ
பாத்தாக் குறிஞ்சி கிட்ட வந்தா நெருஞ்சி

கோவணத்தில் இருந்த பொழுதும்
கோபுரத்தில் இருந்த பொழுதும்
அதுக்கொரு மதிப்பு இல்ல
அழுக்கு அழுக்குத்தான்

சீதமகள் அழுத கணக்கு
தேகமெங்கும் நெறைய இருக்கு
இன்னுமது முடியவில்ல
வழக்கு வழக்குத்தான்

எங்க ஊருப் பொண்ணு அப்போதே
சூரியனக் கட்டி வச்சாளே
எங்க ஊருப் பொண்ணு அப்போதே
சூரியனக் கட்டி வச்சாளே
சுத்தமுள்ள உத்தமி தான்
தீயெடுத்து சுட்டு வச்சா
பத்தினிங்க பாதையில
எங்க பொண்ணு எட்டு வச்சாடோயா
தந்தனதந்தனதந்தனதந்தனனா

கண்ணியில சிக்காதய்யா
கானாங்குருவி ரோஷக்காரக் குருவி
பத்தினிப் பொண்ணு இவ
பாத்தாக் குறிஞ்சி கிட்ட வந்தா நெருஞ்சி