Allola Kallolam |
---|
அல்லோல கல்லோலாஆஅஆஆஆ
அல்லோல கல்லோலாஹாஆஆ
அல்லோல கல்லோலம்
என்ன நினைச்சாலும்
அல்லோல கல்லோலம்
என்ன பண்ணினாலும்
காதல் என்னும் பூதம்
வந்து விளையாட
நாலு பேரு பாதை
மாறி எங்கோ போக
வாழ்க்க ஒரு கதையத்தான்
சிறப்பா எழுதுதே
முடிவென்னஎப்போதும் சொல்லாதே
ஏதோ ஒரு நம்பிக்கையில்
பயணம் தொடருதே
இலக்கு இல்லாம எதுக்கும் நில்லாம
நேரத்தை பார்த்தாலே
அது பாரத்தை கூட்டாதா
வானத்தில் தன்னால
சின்ன வெளிச்சம் வராதா
கேள்விக்கு எல்லாமே
விடை சொல்லிட்டு போகாதா
நண்பனோட துன்பம் எல்லாம்
தன்னுடைய துன்பம் என்று
எண்ணி எண்ணி மனசு ஒன்னு
தவிக்கிறதே
சொந்தம்கூட மறந்து விடும்
பந்தமெல்லாம் பறந்துவிடும்
நட்புக்குள்ள பிரிவெதுவும்
கிடையாதே
பொண்ணுக்குள்ள மனசுண்டு
லட்சியமும் அதிலுண்டு
அதை உண்மை ஆக்கிடவே
ஆசை வராதா
இன்னொருத்தர் லட்சியத்தில்
கல்லெறிஞ்சு பார்க்குற
மோசமான பழக்கமும்
இங்கே ஓயாதா
முள்ளு தொட்டாலும்
பூ காயத்தை பார்க்காது
வெற்றிக்கு முன்னாலே
பட்ட காயங்கள் நிக்காது
வேதனை வந்தாலும்
அது காணாம போயாச்சே
சோகத்தின் பின்னாலே
ஒரு சந்தோசம் வராதா
சோகத்தின் பின்னாலே
ஒரு சந்தோசம் வராதா
சோகத்தின் பின்னாலே
ஒரு சந்தோசம் வராதா