Amaithiyaana Nathiyinile (Sad)

Amaithiyaana Nathiyinile (Sad) Song Lyrics In English


தென்னம்
இளங்கீற்றினிலேஏஏஏ
தென்னம் இளங்கீற்றினிலே
தாலாட்டும் தென்றல் அது

தென்னைதனைச்
சாய்த்துவிடும் புயலாக
வரும்பொழுது

அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும்

காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி
நின்றால் வாழும் ஹோய்
ஹோய்

அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

ஓஒஓஓஓஒ
ஓஒஓஒஓஒ

அமைதியான
நதியினிலே நதியினிலே
நதியினிலே ஓடும்


நாணலிலே
காலெடுத்து நடந்து
வந்த பெண்மை இது

நாணம் என்னும்
தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது

அந்தியில்
மயங்கி விழும்
காலையில் தெளிந்து
விடும்

அன்பு மொழி
கேட்டுவிட்டால் துன்ப
நிலை மாறிவிடும்

அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி
நின்றால் வாழும் ஹோய்
ஹோய்

அமைதியான
நதியினிலே ஓடும்