Amma Amma Endre

Amma Amma Endre Song Lyrics In English


அம்மா அம்மா என்றே
ஆயிரம் ஆண்டுகள் அழுது புரண்டாலும்
மகனே அன்னை வருவாளோ
உனக்கொரு ஆறுதல் சொல்வாளோ
அன்னை வருவாளோ

முன்னை தவம் இருந்து
உன்னை முன்னூறு நாள் சுமந்து
முன்னை தவம் இருந்து
உன்னை முன்னூறு நாள் சுமந்து
பொன்னை போலே உன்னை
போற்றி வளர்த்திட்ட அன்னை வருவாளோ

கொள்ளி இடவும் வகை இல்லை என்றே நீ
கொடுஞ்சிறையில் கலக்கம் கொள்ளாதே
கொள்ளி இடவும் வகை இல்லை என்றே நீ
கொடுஞ்சிறையில் கலக்கம் கொள்ளாதே
அள்ளி இட அரிசி இல்லை என்றால் என்ன
அன்பை சொரிவாய் மகனே


கண்ணீராலே நீராட்டு
அன்னை தன்னை
மண் மேலே தாலாட்டு
கண்ணீராலே நீராட்டு
அன்னை தன்னை
மண் மேலே தாலாட்டு
நெஞ்ச தணலால் நெருப்பினை மூட்டு
நீ உன் கடமையை நிலை நாட்டு
மகனே அன்னை வருவாளோ
உனக்கொரு ஆறுதல் சொல்வாளோ
அன்னை வருவாளோ