Amma Azhage |
---|
அம்மா அழகே
உலகின் ஒளியே
அம்மா அழகே
உலகின் ஒளியே
என் சங்கீதம் உன் கீதமே
உனை நான் அழைத்தால்
விழியில் மழையே
அம்மா அழகே
உலகின் ஒளியே
ஆகாயம் என் பாட்டில்
அசைகின்றது
என் சங்கீதம் பொய் என்று
யார் சொன்னது
கனவுகளே வழிவிடுங்கள்
கலைமகளை வரவிடுங்கள்
மலரில் உறங்கும் பூங்காற்று
அதனை எழுப்பும் என் பாட்டு
ஓடும் நிலாவே ஓளி தீபம் ஏற்று
ராகமே உயிராகுமே
அது பெற்றுத் தரும்
முத்துச் சரம்
சொந்தம் தரும் நல்வேதமும்
இன்பம் தரும் பொன்மந்திரம்
முந்தும் தீ என்னை
சுற்றிச் சுடுமே
எந்தன் இசை என்னை
எட்டிச் சுடுமே
இந்த வெப்பம் என்னை
என்ன செய்யும்
சந்தனங்கள் பூசுமோ
உள்ளிருக்கும் ஜோதி ஒன்று உண்டு
அதனை வெப்பம் தீண்டுமோ
படபட படவென
எரிகிற கொழுந்து
இமைகளை உரசுது
இது ஒரு அழகு
வேதம் கெடாது
தீயில் விழாது
யாரும் தொடாத சுருதி
அங்கம் பொடிபட நெஞ்சம் உருகிட
தேவி வருவது உறுதி
தேவி வருவது உறுதி
தேவி வருவது உறுதி