Amma Nee Kalankathe |
---|
அம்மாஆ நீ கலங்காதே
அம்மாஆநீ தயங்காதே
கணவனே கண் கண்ட தெய்வம்
என மதித்தாயே
அம்மா ஆ நீயல்லவோ பெண் தெய்வம்
பாரத நாட்டிற்கு பெருமை
அளித்திடும் அணிகலன் பெண்குலமேஏ
அணிகலன் பெண்குலமேஏ
பாரத நாட்டிற்கு பெருமை
அளித்திடும் அணிகலன் பெண்குலமேஏ
அணிகலன் பெண்குலமேஏ
வீரமடைவாரே துன்பத்திலும்
வீரமடைவாரே துன்பத்திலும்
உயர் கண்ணியமும் பெரும் புண்ணியமும்
தன்னியல்பாய் கொள்வாள்
வாழ்வினை மகிழ வைப்பாள்
கானகமே இன்ப வீடென
நிழல் போலே
கானகமே இன்ப
வீடென நிழல் போலே
ஜானகி பின் தொடர்ந்தாள் பதியுடன்
ஜானகி பின் தொடர்ந்தாள்
கணவன் பணிவிடையில்
மணிபணியாடைகள்
கணவன் பணிவிடையில்
மணிபணியாடைகள்
துரும்பாய் கருதும் மடந்தை தெய்வம்
கடவுளரும் கற்புடைய மங்கயர்கள்
ஆணைக்குக் காத்திருப்பார்
கடவுளரும் கற்புடைய மங்கயர்கள்
ஆணைக்குக் காத்திருப்பார்
அவள் தெய்வம் தொழாள்
தொழுனர் தொழுதெழுவாள்
அவள் தெய்வம் தொழாள்
தொழுனர் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
பெய்யெனப் பெய்யும் மழை
தன்னலம் சிறிதும் கருதாள்
உடல் பொருள் தியாகமே உருக் கொண்டாள்
தன்னலம் சிறிதும் கருதாள்
உடல் பொருள் தியாகமே உருக் கொண்டாள்
துயர் எத்தனை வரினும்
பூமி போலே தானும்
மன உறுதியும் கொண்டாள்
புன்னகை இன் சொல்லும்
பொற்பணியாய் அணிந்து
புன்னகை இன் சொல்லும்
பொற்பணியாய் அணிந்து
அன்பே உருக் கொண்டாள் தெய்வ
அன்பே உருக் கொண்டாள்