Amma Nee Summandha Pillai

Amma Nee Summandha Pillai Song Lyrics In English


அம்மா
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஒர் ஆலயம்

அம்மா
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை

மண்ணில் என்ன தோன்றக்கூடும்
மழை இல்லாத போது
மனிதனோ மிருகமோ
தாயில்லாமல் ஏது

அன்னை சொன்ன வார்த்தை
இன்று நினைவில் வந்தது
அன்பு என்ற சொல்லே தாயின்
வடிவில் வந்தது
எங்கே எங்கே

அம்மா
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை


வாழவைத்த தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனோ
உலகிலே உன் மகன்
நீர் இல்லாத மீனோ

மீண்டும் இந்த
மண்ணில் வந்து
தோன்ற வேண்டுமே
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த்த வேண்டுமே
எங்கே எங்கே

அம்மா
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்