Amma Nee Summandha Pillai |
---|
அம்மா
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஒர் ஆலயம்
அம்மா
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
மண்ணில் என்ன தோன்றக்கூடும்
மழை இல்லாத போது
மனிதனோ மிருகமோ
தாயில்லாமல் ஏது
அன்னை சொன்ன வார்த்தை
இன்று நினைவில் வந்தது
அன்பு என்ற சொல்லே தாயின்
வடிவில் வந்தது
எங்கே எங்கே
அம்மா
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
வாழவைத்த தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனோ
உலகிலே உன் மகன்
நீர் இல்லாத மீனோ
மீண்டும் இந்த
மண்ணில் வந்து
தோன்ற வேண்டுமே
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த்த வேண்டுமே
எங்கே எங்கே
அம்மா
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்