Ammaanai |
---|
அம்மானை அழகும் மிகும் கண்மானை
அம்மானை அழகும் மிகும் கண்மானை
ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானை
தேடி வரும் பெருமானை
நம்பிய பெண் ஒரு தாரகை
அவள் நாடிய நீ ஒரு வானகம்
நம்பிய பெண் ஒரு தாரகை
அவள் நாடிய நீ ஒரு வானகம்
விண்ணகம் மாறிய போதிலும்
இந்த பெண்ணகம் மாறுவதில்லையே
விண்ணகம் மாறிய போதிலும்
இந்த பெண்ணகம் மாறுவதில்லையே
அம்மானை அழகும் மிகும் கண்மானை
ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானை
தேடி வரும் பெருமானை
பாலினுள் மறைந்துள்ள சுவையென
விழி பளிங்கினில் மறைந்தது உன் முகம்
பாலினுள் மறைந்துள்ள சுவையென
விழி பளிங்கினில் மறைந்தது உன் முகம்
ஆழியில் மறைந்துள்ள மணியென
உன் ஆசையில் மறைந்துள்ளதென் மனம்
ஆழியில் மறைந்துள்ள மணியென
உன் ஆசையில் மறைந்துள்ளதென் மனம்
கன்னியின் நால்வகை சாத்திரம்
தன் காதலன் கண்களில் மாத்திரம்
கன்னியின் நால்வகை சாத்திரம்
தன் காதலன் கண்களில் மாத்திரம்
உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
அதில் ஊற்றிய தேன்மழை உன்முகம்
உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
அதில் ஊற்றிய தேன்மழை உன்முகம்
அம்மானை அழகும் மிகும் கண்மானை
ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானை
தேடி வரும் பெருமானை
பொன்னிற வண்டுகள் பாடின
அவை பூவெனும் மெத்தையில் கூடின
என்னிரு கண்களும் தேடின
அவை ஏக்கத்தில் உன்னிடம் ஓடின
மங்கல சங்குகள் அழைத்தன
இரு மந்திர முல்லைகள் இழுத்தன
உன்னுடன் உடல் உயிர் கலந்தன
இங்கு ஒன்றுமில்லை இனி எனக்கென
அம்மானை அழகும் மிகும் கண்மானை
ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானை
தேடி வரும் பெருமானை