Ammadi Thookamma |
---|
அம்மாடி தூக்கமா
ஆமாமா கேக்கனுமா
அம்மாடி தூக்கமா
ஆமாமா கேக்கனுமா
ஒரு துணையிருக்கற நேரத்திலே
தூக்கமும் வருமா
இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா
தூக்கமும் வருமா
ஒரு துணையிருக்கற நேரத்திலே
தூக்கமும் வருமா
இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா
தூக்கமும் வருமா
ம்ம்ம்அம்மாடி தூக்கமா
ம்ம்ம்ஆமாமா கேக்கனுமா
நேத்து வந்தது நெனப்பு
அதை நெனைக்க நெனைக்க இனிப்பு
நேத்து வந்தது நெனப்பு
அதை நெனைக்க நெனைக்க இனிப்பு
அது காத்தடிக்கிற வேளையிலே
கனிந்தது யார் பொறுப்பு
பார்த்து நின்னது வயசு
கொஞ்சம் பழகச் சொன்னது மனசு
பார்த்து நின்னது வயசு
கொஞ்சம் பழகச் சொன்னது மனசு
ஆனா பயமிருக்குது காரணம்
இந்த பாடம் எனக்கு புதுசு
காதல் எனக்கு புதுசு
அம்மாடி தூக்கமா
ஆமாமா கேக்கனுமா
விடிய விடிய பேசு
உன் விழியை எடுத்து வீசு
விடிய விடிய பேசு
உன் விழியை எடுத்து வீசு
உன் கைகளில் நான் குடியிருந்தால்
உலகம் எனக்கு தூசு
நாலு பேரை அழைப்பேன்
மண மாலை ஒன்றை தொடுப்பேன்
நாலு பேரை அழைப்பேன்
மண மாலை ஒன்றை தொடுப்பேன்
இந்த நாட்டுப் பெண்ணை
அருகில் வைத்து நாடகத்தை நடிப்பேன்
காதல் நாடகத்தை நடிப்பேன்
அம்மாடி தூக்கமா
ஆமாமா கேக்கனுமா