Ammammaa Pasikkudhammaa |
---|
இருவர் : அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்
அம்மம்மா பசிக்குதம்மா
காசு பணம் கேட்கவில்லை
பிடி சோறு போதும்
காசு பணம் கேட்கவில்லை
பிடி சோறு போதும்
பால் பழமும் தேவையில்லை
பழஞ்சோறு போதும்
கொடுப்பதனாலே குறையாதம்மா
இரைக்கிற ஊற்று வற்றாதம்மா
இருவர் : அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்
அம்மம்மா பசிக்குதம்மா
கங்கையும் காவிரியும்
பாய்ந்தோடும் நாடு
கங்கையும் காவிரியும்
பாய்ந்தோடும் நாடு
திங்கிற சோற்றுக்கு அலைவதெங்கள் பாடு
கூச்சல்களால் எங்கள்
பசி தீருமா
கூட்டத்தை பார்த்து வயிறாறுமா
இருவர் : அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்
காலம் வரும் நாள் வரைக்கும்
உயிர் வாழ வேண்டும்
கண் திறந்து பாருமைய்யா
புண்ணியமா போகும்
கருணையில் தானே
மனம் வாழுது
கடவுளைப் போலே
குணம் வாழுது
இருவர் : அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்
அம்மம்மா பசிக்குதம்மா