Ammammammaa Pon Maalai

Ammammammaa Pon Maalai Song Lyrics In English


அம்மம்மம்மா பொன் மாலை
தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே
அம்மம்மம்மா பொன் மாலை தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே

பாடாத ராகமே
காதோரம் கேட்குமே
என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ

அம்மம்மம்மா பொன் மாலை
தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே

எங்கெங்கும் வண்ணம் கூடி
என்றென்றும் காணும் தேடி
பூலோகம் மேலோகம் ஆனதே
பொன் தோகை காட்டும் மயிலும்
பூபாளம் பாடும் குயிலும்
சங்கீதத்தால் ஒன்று சேர்ந்ததே

என் உள்ளம் ஆடும்
ஏதேதோ பாடும்
கன்னி பெண் மேனியில்
இன்பங்கள் கூடிடும்
என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ

அம்மம்மம்மா பொன் மாலை
தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே


நீரோடும் ஓடை கண்டு
நீராடும் ஆசை கொண்டு
மேகங்கள் பெண் போல ஏங்கியே
பூந்தென்றல் தேரில் ஏறி
பொன் மாலை மஞ்சள் பூசி
நாள்தோறும் கை கொண்டு தாங்கியே

ஏதேதோ ஆசை
பேசாதோ பாசை
எங்கெங்கும் ஓவியம்
கண் காணும் காவியம்
என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ

அம்மம்மம்மா பொன் மாலை
தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே
என் உள்ளம் வானமானதே ஏனோ
அம்மம்மம்மா பொன் மாலை தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே

பாடாத ராகமே
காதோரம் கேட்குமே
என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ

அம்மம்மம்மா பொன் மாலை
தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே