Amman Koyil Vaasalile |
---|
பாடலாசிரியர் : வாலி
அம்மன் கோயில் வாசலிலேஏ வாசலிலேஏஏஏ தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலேஏ பூங்குயிலேஏஏஏ
ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு
அம்மன் கோயில் வாசலிலேஏ வாசலிலேஏஏஏ தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலேஏ பூங்குயிலேஏஏஏ
ஏரோட்டும் கையும் ஏத்தமிடும் கையும் இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும் இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும் நம்ம கண்ணான ஆத்தா கண்ணெடுத்து பாத்தா இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும் இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும்
அடி மேக்கால ஓடும் அந்த வாய்க்கால கேளு தென்னந்தோப்போரம் பாடும் சின்ன மைனாவ கேளு இந்த ஊர் கூடி உறவாடி இசைபாடும் திருநாளு இதுதான்டி தங்கமணி
அம்மன் கோயில் வாசலிலேஏ வாசலிலேஏ தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலேஏ பூங்குயிலேஏ
ஏஏஏஏஏ ஏஏஏஏஏஏ
பானையில வேகும் பச்சரிசி வாசம் அது எங்கூறு வெள்ளாமைய பேசும் அது எங்கூறு வெள்ளாமைய பேசும் அடி மேலாக சுத்தும் மஞ்ச இஞ்சி கொத்தும் மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும் மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும்
அச்சி வெல்லந்தான் சேத்து பசு நெய்த்தான் ஊத்து அடி யம்மாடி ராக்கு புது பொங்கலத்தான் ஆக்கு அவ தாய்ப்போல காப்பாளே புகழ் சேரும் பொருள் சேரும் புது வாழ்வு கை வரும்
அம்மன் கோயில் வாசலிலேஏ வாசலிலேஏஏஏ தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலேஏ பூங்குயிலேஏஏஏ
ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு