Ammana Summa Illada |
---|
அம்மானா சும்மா
இல்லடா ஆ
அவ இல்லேனா
யாரும் இல்லடா ஆ
அம்மானா சும்மா
இல்லடா ஆ
அவ இல்லேனா
யாரும் இல்லடா ஆ
தங்கம் கொண்ட பூமி பூமி
ஒன்ன தாங்கிக் கொண்ட சாமி சாமி
பெத்தவள மறந்தா
அவன் செத்தவனே தான்டா
அந்த உத்தமிய நெனச்சா
அவன் உத்தமனே தான்டா
அம்மானா சும்மா
இல்லடா ஆ
அவ இல்லேனா
யாரும் இல்லடா ஆ
நல்ல பேர நீ எடுத்தா
அப்பனுக்கு சந்தோஷம்
நாலு காச நீ கொடுத்தா
அண்ணனுக்கும் சந்தோஷம்
போற வழி போக விட்டா
புள்ளைக்கெல்லாம் சந்தோஷம்
வாரதெல்லாம் வாரித் தந்தா
ஊருக்கெல்லாம் சந்தோஷம்
நெஞ்சு நெகிழ்ந்து
மந்திரம் சொன்னா
வந்திருந்துதான்
தெய்வம் மகிழும்
ஒண்ணக் கொடுத்து
ஒண்ணு வாங்குனா
அன்பு என்னடா
பண்பு என்னடா
தந்தாலும் தராமப் போனாலும்
தாங்கும் அவ கோவில் தான்டா
அம்மானா சும்மா
இல்லடா ஆ
அவ இல்லேனா
யாரும் இல்லடா ஆ
இராவு பகல் கண் முழிச்சு
நாளும் உன்னப் பாத்திருப்பா
தாலாட்டு பாடி வெச்சு
தன் மடியில் தூங்க வைப்பா
புள்ளைங்கள தூங்க வெச்சு
கண்ணுறக்கம் தள்ளி வைப்பா
உள்ளத்துல உன்ன வெச்சு
ஊருக்கெல்லாம் சொல்லி வைப்பா
கொஞ்சம் பசிச்சா ஆ
நெஞ்சு கொதிக்கும்
தாயி போலத்தான்
நண்பன் அவனே
சாமி கிட்டத்தான்
ஒன்ன நெனச்சு
வேண்டி இருக்கும்
அன்பன் அவனே
அன்னையப் போல்
நண்பனும் உண்டு
தெய்வத்தப் போல்
அன்னையும் உண்டு
அம்மானா சும்மா
இல்லடா ஆ
அவ இல்லேனா
யாரும் இல்லடா ஆ
தங்கம் கொண்ட பூமி பூமி
ஒன்ன தாங்கிக் கொண்ட சாமி சாமி
பெத்தவள மறந்தா
அவன் செத்தவனே தான்டா
அந்த உத்தமிய நெனச்சா
அவன் உத்தமனே தான்டா
அம்மானா சும்மா
இல்லடா ஆ
அவ இல்லேனா
யாரும் இல்லடா ஆ