Amudhai Pole Kidaithaai |
---|
அமுதைப் போல கிடைத்தாய்
மயக்கம் கோடி கொடுத்தாய்
நீயில்லாமல் என்னாகிறேன்
உடைந்து போன இதயம்
இருண்டு போன உலகம்
நீயில்லாமல் இங்கே
நான் என்னாகிறேனோ
ஹோ ஓஒ
ஹோ ஓஒ
ஹோ ஓஒ
ஹோ ஓஒ
திறந்தேன் என் கண்ணை
திறந்தேன் என் வாழ்வை
திறந்தேன் என் நெஞ்சை
திறந்தேனே உன்னை
மறந்தேன் என் இன்பம்
மறந்தேன் என் கண்ணீர்
மறந்தேன் என் மூச்சை
மறந்தேனா உன்னை
தவறென அறிந்தாலும்
உனை விரும்பிய நெஞ்சம்
அலைபாயுது இன்னும்
நிலையில்லாமல்
யாவும் நீ என்றேன்
நீ என் வாழ்வென்றேன்
ஏன் பிரிந்தேனோ
கேட்காதே
உலகில் பொய் உலகில்
விஷமேதுஅமுதேது
ஏதும் நானறியேன்
நீயே மெய்யாய்
வலிகள் பகிர்ந்தாய்
பிறகேன் பிரிந்தாய்
எனை நீ பிரிந்தும்
பிரியாமலே
அமுதம் போன்ற நஞ்சும்
உடைந்து போன நெஞ்சும்
இறுதியில் என்ன எஞ்சும்
என் உள்ளே நீ சென்று
பார்ப்பாயா கொஞ்சம்