Amutha Tamizhil

Amutha Tamizhil Song Lyrics In English


அமுதத் தமிழில்
எழுதும் கவிதை
புதுமைப் புலவன் நீ

அமுதத் தமிழில்
எழுதும் கவிதை
புதுமைப் புலவன் நீ
புவி அரசர் குலமும்
வணங்கும் புகழின்
புரட்சித் தலைவன் நீ
புரட்சித் தலைவன் நீநீ

அமுதத் தமிழில்
எழுதும் கவிதை
புதுமைப் புலவன் நீ

இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ
இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ
சிறு இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும்
விளக்க உரையும் நீ விளக்க உரையும் நீ

நாணம் ஒரு புறமும்
ஆசை ஒரு புறமும்
நெஞ்சில் மிதப்பதென்ன
நாணம் ஒரு புறமும்
ஆசை ஒரு புறமும்
நெஞ்சில் மிதப்பதென்ன

உன்னை ஒரு கணமும்
என்னை மறு கணமும்
உள்ளம் நினைப்பதென்ன
உள்ளம் நினைப்பதென்ன

நாதம் இசைத்து வரும்
பாத மணிச் சிலம்பு
என்னை அழைப்பதென்ன
நாதம் இசைத்து வரும்
பாத மணிச் சிலம்பு
என்னை அழைப்பதென்ன
ஊஞ்சல் அசைந்து வரும்
நீல விழியிரண்டில்
வண்ணம் சிவப்பதென்ன
வண்ணம் சிவப்பதென்ன


எதுகை அது உனது
இரு கை அதில் எனது
பெண்மை ஆடட்டுமே
எதுகை அது உனது
இரு கை அதில் எனது
பெண்மை ஆடட்டுமே

ஒரு கை குழல் தழுவ
மறு கை உடல் தழுவ
இன்பம் தேடட்டுமே
இன்பம் தேடட்டுமே

வைகை அணை நெருங்கி
வைகை அணை மதுரை
வைகை அணை போலவே

மங்கை எனும் அமுத
கங்கை பெருகுவது
நீந்திக் கரை காணவே
நீந்திக் கரை காணவே

அமுதத் தமிழில்
எழுதும் கவிதை
புதுமைப் புலவன் நீ
புவி அரசர் குலமும்
வணங்கும் புகழின்
புரட்சித் தலைவன் நீ
புரட்சித் தலைவன் நீ