Amutha Tamizhil |
---|
அமுதத் தமிழில்
எழுதும் கவிதை
புதுமைப் புலவன் நீ
அமுதத் தமிழில்
எழுதும் கவிதை
புதுமைப் புலவன் நீ
புவி அரசர் குலமும்
வணங்கும் புகழின்
புரட்சித் தலைவன் நீ
புரட்சித் தலைவன் நீநீ
அமுதத் தமிழில்
எழுதும் கவிதை
புதுமைப் புலவன் நீ
இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ
இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ
சிறு இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும்
விளக்க உரையும் நீ விளக்க உரையும் நீ
நாணம் ஒரு புறமும்
ஆசை ஒரு புறமும்
நெஞ்சில் மிதப்பதென்ன
நாணம் ஒரு புறமும்
ஆசை ஒரு புறமும்
நெஞ்சில் மிதப்பதென்ன
உன்னை ஒரு கணமும்
என்னை மறு கணமும்
உள்ளம் நினைப்பதென்ன
உள்ளம் நினைப்பதென்ன
நாதம் இசைத்து வரும்
பாத மணிச் சிலம்பு
என்னை அழைப்பதென்ன
நாதம் இசைத்து வரும்
பாத மணிச் சிலம்பு
என்னை அழைப்பதென்ன
ஊஞ்சல் அசைந்து வரும்
நீல விழியிரண்டில்
வண்ணம் சிவப்பதென்ன
வண்ணம் சிவப்பதென்ன
எதுகை அது உனது
இரு கை அதில் எனது
பெண்மை ஆடட்டுமே
எதுகை அது உனது
இரு கை அதில் எனது
பெண்மை ஆடட்டுமே
ஒரு கை குழல் தழுவ
மறு கை உடல் தழுவ
இன்பம் தேடட்டுமே
இன்பம் தேடட்டுமே
வைகை அணை நெருங்கி
வைகை அணை மதுரை
வைகை அணை போலவே
மங்கை எனும் அமுத
கங்கை பெருகுவது
நீந்திக் கரை காணவே
நீந்திக் கரை காணவே
அமுதத் தமிழில்
எழுதும் கவிதை
புதுமைப் புலவன் நீ
புவி அரசர் குலமும்
வணங்கும் புகழின்
புரட்சித் தலைவன் நீ
புரட்சித் தலைவன் நீ