Anandha Bhairavi |
---|
ஆனந்த பைரவி
அகிலாண்ட நாயகி
அருள் சார்ந்த
திருச்சபையில் வீற்றிருந்தாள்
ஆண் ஆனந்த பைரவி
அகிலாண்ட நாயகி
அருள் சார்ந்த
திருச்சபையில் வீற்றிருந்தாள்
ஒரு கையில் சிறு வில்லும்
மறு கையில் சுடர் வாளும்
ஒரு கையில் சிறு வில்லும்
மறு கையில் சுடர் வாளும்
அறம் போற்றும் திறத்தோடு ஏற்றிருந்தாள்
ஆனந்த பைரவி
அகிலாண்ட நாயகி
ஆண் அருள் சார்ந்த
திருச்சபையில் வீற்றிருந்தாள்
பாதாதி கேசம்
ரவி பிரபை போல
ஜொலிக்க
வேதாந்த புனலில்
திரு விழி மீன்கள்
குளிக்க
பாதாதி கேசம்
ரவி பிரபை போல
ஜொலிக்க
வேதாந்த புனலில்
திரு விழி மீன்கள்
குளிக்க
ஆதார சுதி என்று
திருநாமம் ஒலிக்க
ஆஆஆஅ
ஆதார சுதி என்று
திருநாமம் ஒலிக்க
மாதா உன் பாதத்தில்
மா முனிகள் துதிக்க
ஆனந்த பைரவி
அகிலாண்ட நாயகி
அருள் சார்ந்த
திருச்சபையில் வீற்றிருந்தாள்
சர்வாலங்கார பூஷணியாய்
சர்வலோக நாயகி சபையேறி
வீற்றிருக்கும் சமயத்திலே
ஆஹா
முப்பத்து முக்கோடி முனிவர்களும்
அடியார்களும் அன்பர்களும்
அன்னையே அம்மையே
அம்பிகையே
சரணம் சரணம் சரணம்
என்று ஓடோடி வந்து முறையிட்டார்கள்
என்ன முறையிட்டார்கள்
அந்த மகிஷாசுரன்
அக்கிரமத்திற்கு
ஒரு முடிவில்லையோ
என்று முறையிட்டார்கள்
முடிவில்லையோ ஒரு முடிவில்லையோ
முடிவில்லையோ ஒரு முடிவில்லையோ
தன் மாவலி தனைக்காட்டி
காவலில் எமை வாட்டி
தன் மாவலி தனைக்காட்டி
காவலில் எமை வாட்டி
மகிஷாசுரன் எமக்கு
இழைக்கும் துயர் தனக்கு (களுக்கு
முடிவில்லையோ ஒரு முடிவில்லையோ
தான் எனும் மதம் கொண்ட
அரக்கரை வீழ்த்த
தவசிகள் நிகழ்த்தும் வேள்வியை வாழ்த்த
தான் எனும் மதம் கொண்ட
அரக்கரை வீழ்த்த
தவசிகள் நிகழ்த்தும் வேள்வியை வாழ்த்த
தாய் உனை அல்லால் காப்பவர் ஏது
காப்பவர் ஏது காப்பவர் ஏது
திருவருள் புரிய வருகை இப்போது
வருகை இப்போது வருகை இப்போது
தாய் உனை அல்லால் காப்பவர் ஏது
திருவருள் புரிய வருகை இப்போது
வருகை இப்போது வருகை இப்போது
வருகை இப்போது வருகை இப்போது
அம்பிகை கண் மலர்ந்தாள்
அறத்தை காக்கவும் வரத்தை போக்கவும்
வையம் நடு நடுங்க
வானம் கிடுகிடுக்க
சினம் கொண்டு சீற்றம் கொண்டு
கனம் கொண்ட பூங்குழலாள்
ம்ம்ம்ம்
புறப்பட்டாள்
ராஜ ராஜேஸ்வரி புறப்பட்டாள்
புறப்பட்டாள்
ராஜ ராஜேஸ்வரி புறப்பட்டாள்
மழை நிகர் குழல் தன்னை
விரித்து நுனி முடித்து
செந்தழை நிகர் விழிகளும் காட்டி
மை தீட்டி
மழை நிகர் குழல் தன்னை
விரித்து நுனி முடித்து
செந்தழை நிகர் விழிகளும் காட்டி
மை தீட்டி
செந்நிற குங்குமம் நெற்றியில் மின்ன
சர்ப்பத்தை போல் அவள் நூலிடை பின்ன
செந்நிற குங்குமம் நெற்றியில் மின்ன
சர்ப்பத்தை போல் அவள் நூலிடை பின்ன
மஞ்சள் நிற மேனி செஞ்சுடராக
மங்கள் மங்கை வெண்கனலாக
வெண்கனலாக
புறப்பட்டாள்
பத்ரகாளியாய் புறப்பட்டாள்
புறப்பட்டாள்
பத்ரகாளியாய் புறப்பட்டாள்
புறப்பட்டாள்
பத்ரகாளியாய் புறப்பட்டாள்