Anandham Vandhadhadi |
---|
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே
என் காதல் கண்மனியே
உன் கானம் கேட்கலையே
உயிருக்கு உயிராய் உந்தன்
நெஞ்சில் நாம் சேர்வதெப்போ
அழகின் உருவே இதய மலரே
உதயமாகும் புதிய நிலவே
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே
மேகம் கருக்கயிலே
தேகை விறிக்கும் மயிலே
ஆஅஆஅஆ
மேகம் கருக்கயிலே
தேகை விறிக்கும் மயிலே
கண்ணே என் கண் முன்னே வந்து
காதல்கதை சொல்வதெப்போ
மாலை இளம் பொழுதில்
கானம் படிக்கும் குயிலே
தாலாட்டும் தென்றலாய்
நீ பாட்டு சொல்லி கேட்பதெப்போ
உனது மடியில் விழிகள் மூட
உறங்க வைத்து நீயும் பாட
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே
மாதர்கள் மலரெடுத்து
மலருக்கு மலர் தொடுத்து
மாதர்கள் மலரெடுத்து
மலருக்கு மலர் தொடுத்து
மருதாணி வண்ணமிட்டு
பெண் அழைத்து முன்னே வர
பூ மாலை நானெடுத்து
தோளோடு சூடிவிட்டு
மார்போடு சேர்த்து கொள்ளும்
மன நாளின்சேதி சொல்லு
நாதம் முழங்க நேசம் துவங்க
வாழ்த்து குவிய வாழ்வு துலங்க
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே
என் காதல் கண்மனியே
உன் கானம் கேட்கலையே
உயிருக்கு உயிராய் உந்தன்
நெஞ்சில் நான் சேர்வதெப்போ
அழகின் உருவே இதய மலரே
உதயமாகும் புதிய நிலவே
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே