Anantha Nilaiyam Ondru |
---|
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
காணவரும் பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பாய்
காணவரும் பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பாய்
காலமெல்லாம் திருமலையை ஆட்சி புரிவாய்
வரும் காலமெல்லாம் திருமலையை ஆட்சி புரிவாய்
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
குற்றமொன்று நான் புரிந்தால் உன் செயலே
நல்ல குணமொன்று நானடைந்தால் உன் வரவே
குற்றமொன்று நான் புரிந்தால் உன் செயலே
நல்ல குணமொன்று நானடைந்தால் உன் வரவே
சுற்றமென்று வருவதெல்லாம் உன் பொருளே
சுற்றமென்று வருவதெல்லாம் உன் பொருளே
நான் பற்றி நிற்கும் பாசமெல்லாம் உன் அருளே
நான் பற்றி நிற்கும் பாசமெல்லாம் உன் அருளே
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
கார் முகில்கள் ஆடுகின்ற ஏழுமலை
உன்னை கைதொழுது மானிடர்கள் வாழும் மலை
கார் முகில்கள் ஆடுகின்ற ஏழுமலை
உன்னை கைதொழுது மானிடர்கள் வாழும் மலை
ஊர் முழுதும் ஓடிவந்து கூடும் மலை
ஊர் முழுதும் ஓடிவந்து கூடும் மலை
உன்னையன்றி தெய்வமிங்கு ஏதுமில்லை
உன்னையன்றி தெய்வமிங்கு ஏதுமில்லை
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்