Anantha Nilaiyam Ondru

Anantha Nilaiyam Ondru Song Lyrics In English


ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
காணவரும் பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பாய்
காணவரும் பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பாய்
காலமெல்லாம் திருமலையை ஆட்சி புரிவாய்
வரும் காலமெல்லாம் திருமலையை ஆட்சி புரிவாய்

ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்

குற்றமொன்று நான் புரிந்தால் உன் செயலே
நல்ல குணமொன்று நானடைந்தால் உன் வரவே
குற்றமொன்று நான் புரிந்தால் உன் செயலே
நல்ல குணமொன்று நானடைந்தால் உன் வரவே
சுற்றமென்று வருவதெல்லாம் உன் பொருளே
சுற்றமென்று வருவதெல்லாம் உன் பொருளே
நான் பற்றி நிற்கும் பாசமெல்லாம் உன் அருளே
நான் பற்றி நிற்கும் பாசமெல்லாம் உன் அருளே

ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்


கார் முகில்கள் ஆடுகின்ற ஏழுமலை
உன்னை கைதொழுது மானிடர்கள் வாழும் மலை
கார் முகில்கள் ஆடுகின்ற ஏழுமலை
உன்னை கைதொழுது மானிடர்கள் வாழும் மலை
ஊர் முழுதும் ஓடிவந்து கூடும் மலை
ஊர் முழுதும் ஓடிவந்து கூடும் மலை
உன்னையன்றி தெய்வமிங்கு ஏதுமில்லை
உன்னையன்றி தெய்வமிங்கு ஏதுமில்லை

ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்