Anathai Endru |
---|
பாடகி : பவதாரணி
பெண் : அனாதை என்று
எம்மை ஆக்கிடாதே
காக்க வேண்டும் இறைவா
அய்யா உன் காதில்
எங்கள் பாடல் ஓசை
கேட்க வேண்டும் இறைவா
அனாதை என்று
எம்மை ஆக்கிடாதே
காக்க வேண்டும் இறைவா
அய்யா உன் காதில்
எங்கள் பாடல் ஓசை
கேட்க வேண்டும் இறைவா
எங்கள் காவல்
தெய்வம் மெல்ல
விழி மலர வேண்டுமே
இரு கால்கள் மீண்டும் எழுந்து
நடை பயில வேண்டுமே
எங்கள் கோயில்
தீபம் இங்கே
ஒளி வீச வேண்டுமே
உங்கள் கருணை என்று நாங்கள்
அதை பேச வேண்டுமே
பொல்லாத தீமை யாவும்
இல்லாமல் மண்ணில் வீழ
எல்லார்க்கும் எந்த நாளும்
பொன்னான நன்மை சூழ
நூறு ஆண்டு எங்கள் மன்னன்
வாழ வேண்டுமே சேதுபதி
எங்கள் தலைவன் சேதுபதி
என்றும் நமது நீதிபதி
எழுந்து வா புது வித பொலிவுடன்
எதிரிகள் பொடிபடும் வலிவுடன்
அவர் நடையிலே
திசைகளும் அதிர்ந்திடும்
எதிர் வரும் தடைகளும்
உடைபடும்
தருமம் பிழைத்தது
திரும்ப எழுந்தது
தலையும் நிமிர்ந்தது
துணிவுடன் நடந்தது
எங்கள் தலைவர் சேதுபதி
என்றும் நமது நீதிபதி
எங்கள் தலைவர் சேதுபதி
என்றும் நமது நீதிபதி
ஆ ஆஆ ஆஆ
ஆ ஆஆ ஆஆ
ஆ ஆஆ ஆஆ